செய்திகள் :

Israel - Iran : `இந்தியா பாகிஸ்தானை போல ஈரான் இஸ்ரேலும்...’ - சொன்னதையே சொல்லும் ட்ரம்ப்

post image

ஜூன் 13 அன்று, இஸ்ரேல் 'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில் ஈரானில் உள்ள நடான்ஸ், கோண்டாப், கோர்ராமாபாத்தில் உள்ள அணுசக்தி நிலையங்கள், இராணுவ தளங்கள், ஏவுகணை உற்பத்தி தளங்கள் ஆகிய170 க்கும் மேற்பட்ட இடங்கள், 720 இராணுவ உள்கட்டமைப்பு வசதிகளை இலக்காகக் கொண்டு இராணுவத் தாக்குதலைத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் ஒரே இரவில் தீவிரமடைந்தது.

இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்
இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்

தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இரு நாடுகளின் தலைவர்களும் பதிலடிகள் தொடரும் என்று பேசி வருகிறார்கள். இந்தத் தாக்குதலில் இதுவரை, உயர் அதிகாரிகள், அணு விஞ்ஞானிகள் உட்பட 14 மூத்த ஈரானிய அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

தெஹ்ரான் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த தாக்குதலில் 20 குழந்தைகள் உட்பட 60 பொதுமக்கள் இறந்ததாக ஈரானிய அரசு தெரிவித்திருக்கிறது. அதே நேரம் ஈரான் இஸ்ரேலை குறிவைத்து சுமார் 200 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 100 ட்ரோன்கள் மூலம் பதிலடி தாக்குதலை நடத்தியது.

இதில் குறைந்தது 10 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர், 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இருநாடுகளுக்கும் மத்தியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தன் சமூக ஊடக பக்கத்தில்,

``நான் இந்தியாவையும் பாகிஸ்தானையும் (ஒரு ஒப்பந்தம்) செய்ய வைத்தது போல, ஈரானும் இஸ்ரேலும் ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும். விரைவாக ஒரு முடிவை எடுத்து, போரை நிறுத்த இரண்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறோம்.

டொனால்டு ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப்

சில முட்டாள்தனமான முடிவுகளால் பைடன் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார். நான் அதை மீண்டும் சரிசெய்வேன். நைல் நதியில் அணை கட்டுவது தொடர்பாக எகிப்துக்கும் எத்தியோப்பியாவிற்கும் இடையே ஏற்பட்ட மோதல் எனது தலையீட்டால் குறைந்தபட்சம் இப்போதைக்கு நிறுத்தப்பட்டிருக்கிறது. அது அப்படியே தொடரும்.

அதேப் போல இப்போது இஸ்ரேல் - ஈரானுக்கு இடைய பல சந்திப்புகள் நடைபெறுகின்றன. நான் நிறைய செய்கிறேன், எதற்கும் ஒருபோதும் பாராட்டு பெறுவதில்லை. ஆனால் மக்கள் புரிந்துகொள்கிறார்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதலை இந்தியா பாகிஸ்தான் அதிகாரிகள் தான் பேசி முடிவுக்கு கொண்டு வந்தார்கள் என இந்தியா தொடர்ந்து கூறி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தான் தான் மோதலை முடிவுக்கு கொண்டு வந்ததாக தொடர்ந்து தெரிவித்து வருகிறார். தற்போது இஸ்ரேல் - ஈரான் மோதலை மையமாக வைத்து அதே கருத்தை மீண்டும் தெரிவித்திருக்கிறார் ட்ரம்ப்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

'தமிழ்நாட்டில் 18 லட்சம் மக்களுக்கு ஒரு எம்.பி; பீகாரில் 30 லட்சம்..!' - திடீர் சர்ச்சையின் பின்னணி

இந்த ஆண்டு நவம்பர் மாதம் பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலுக்கான பிரசாரங்கள் பீகாரில் சூடு பிடித்து வருகிறது. இந்த நிலையில், பாஜக கூட்டணியில் இருக்கும் ரா... மேலும் பார்க்க

`சீமானின் சட்டவிரோத கள் இறக்கும் போராட்டத்தை தடை செய்ய காவல்துறை தவறியது ஏன்?’ - டாக்டர் கிருஷ்ணசாமி

"கள் இறக்க அனுமதி இல்லை என அறிந்தும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பெரியதாழையில் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 'கள்' இறக்க அனுமதித்தது ஏன்?" என்று புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழ... மேலும் பார்க்க

`தந்தை அம்பேத்கர், 'பிரதமர் பதவியை கைப்பற்றுங்கள்' என்று தான் வழிகாட்டியிருக்கிறார்’ - திருமாவளவன்

திருச்சியில் சனிக்கிழமை மாலை 'மதசார்பின்மை காப்போம்' என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் டி.வி.எஸ் பகுதியில் இருந்து திருச்சி மாநகராட்சி அலுவலகம் வரை 3 கிலோ... மேலும் பார்க்க

'ட்ரம்ப் பார்ட்னர் நான்' - ட்ரம்பை கொல்ல இருமுறை ஈரான் முயற்சியா? - நெதன்யாகு குற்றச்சாட்டு என்ன?

இஸ்ரேல் - ஈரான் இடையே தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. நேற்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஃபாக்ஸ் நியூஸ் செய்தி சேனலுக்கு நேர்காணல் ஒன்றை தந்துள்ளார். அதில் அவர் அமெரிக்க அதிபர் ட்ரம்பை ஈரான் இரண்டு முற... மேலும் பார்க்க

”எல்லா மாநிலங்களிலும் கள் இறக்க அனுமதி உள்ளபோது, தமிழகத்தில் மட்டும் தடை ஏன்?”- சீமான் கேள்வி!

நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் தமிழ்நாட்டில் கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். மதுபானங்களை தமிழ்நாடு... மேலும் பார்க்க