பெங்களூரில் தடையை மீறி பைக் டாக்ஸிகள் இயக்கம்!
பெங்களூரு: பைக் டாக்ஸி சேவைகள் அனைத்துக்கும் கர்நாடகத்தில் இன்றிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடை உத்தரவையும் மீறி பெங்களூரில் பைக் டாக்ஸிகள் இயக்கப்பட்டுள்ளன.
கர்நாடக நீதிமன்ற உத்தரவின் எதிரொலியால் அம்மாநிலத்தில் திங்கள்கிழமை(ஜூன் 16)முதல் பெரும்பாலான பைக் டாக்ஸி சேவைகள் இயங்கவில்லை. எனினும், ஒருசில பைக் டாக்ஸிகள் வழக்கம்போல் இயக்கப்பட்டதால் அவற்றை தடுக்க காவல் துறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
பைக் டாக்ஸி சேவைகளுக்கு அனுமதியளிக்கக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான அடுத்தக்கட்ட விசாரணை ஜூன் 24-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:கர்நாடகம்: பைக் டாக்ஸி சேவைகள் அனைத்தும் நிறுத்தம் - ஜூன் 16முதல் இயங்காது!