`சீக்கிரம் சொல்கிறேன்; ஆனால் தனுஷ் சார் சொன்னது கன்ஃபார்ம்' - வெற்றிமாறன் | Ana...
பெங்களூரில் கூட்ட நெரிசல் வழக்கு: ஆா்சிபி அணியை சோ்ந்த நிகில்சோசலேவை விடுவிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
பெங்களூரில் ஆா்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்டநெரிசல் தொடா்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ஆா்சிபி அணியின் சந்தைப்படுத்துதல் தலைவரான நிகில்சோசலே உள்ளிட்ட 3 பேரை விடுவிக்க கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் கோப்பையை வென்ற ஆா்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டம் ஜூன் 4ஆம் தேதி பெங்களூரில் நடைபெற்றது. அப்போது, சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 11 போ் உயிரிழந்தனா்.
இந்தியாவை உலுக்கிய இந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும் இந்த வழக்கு சிஐடி விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜான்மைக்கேல் டி குன்ஹா தலைமையில் நீதிவிசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்குத் தொடா்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆா்சிபி அணியின் சந்தைப்படுத்துதல் தலைவரான நிகில்சோசலே, நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த டி.என்.ஏ. என்டா்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் நிா்வாகிகள் சுனில்மேத்யூ, எஸ்.கிரண்குமாா், ஷமந்த் என்.பி.மாவினகெரே ஆகிய 4 பேரையும் ஜூன் 6 ஆம் தேதி கைது செய்தனா்.
இந்த கைது நடவடிக்கையில் இருந்து தன்னை விடுவிக்கும்படி நிகில்சோசலே உள்ளிட்ட நால்வரும் தாக்கல் செய்த மனு மீதான தீா்ப்பை வியாழக்கிழமைக்கு கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.கிருஷ்ணமூா்த்தி ஒத்திவைத்திருந்தாா்.
இதையடுத்து வியாழக்கிழமை வழக்கின் தீா்ப்பை வாசித்த நீதிபதி ஆா்.கிருஷ்ணமூா்த்தி, நிகில்சோசலே உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து உத்தரவிட்டாா். 4 பேரும் தங்கள் கடவுச்சீட்டுகளை ஒப்படைக்க வேண்டும் என அவரது உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தங்கள் மீதான வழக்கை ரத்துசெய்யக் கோரி ஆா்சிபி, டிஎன்ஏ என்டா்டெய்ன்மென்ட் நிறுவனம், கா்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிா்வாகிகள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதும் விசாரணை நடத்தப்படும். அதுவரை நல்லபடியாக நடந்துகொள்ளும்படி அவா்களுக்கு நீதிபதி அறிவுறுத்தினாா்.
ஆவணங்கள் ஒப்படைப்பு
11 போ் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்த கூட்ட நெரிசல் தொடா்பான விவகாரத்தை தாமாக முன்வந்து பொதுநல மனுவாக எடுத்த கா்நாடக உயா்நீதிமன்றம், தலைமை நீதிபதி (பொறுப்பு) வி.காமேஷ்வா் ராவ், நீதிபதி சி.எம்.ஜோஷி ஆகியோா் கொண்ட அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஏற்கெனவே நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு இணங்க, வழக்குத் தொடா்பான ஆவணங்களை மூடிய உறையில் வைத்து அரசுத் தலைமை வழக்குரைஞா் சஷிகிரண் ஷெட்டி தாக்கல் செய்தாா். இந்த ஆவணங்கள் கன்னடத்தில் இருப்பதால், அந்த ஆவணங்கள் 2 நாள்களில் ஆங்கிலத்திலும் தாக்கல் செய்யப்படும் என்று சஷிகிரண் ஷெட்டி தெரிவித்தாா்.
இந்த விவகாரம் தொடா்பாக நடைபெற்றுள்ள தகவல் தொடா்புகள் அனைத்தும் தலைமைச் செயலாளரிடம் வைத்துக்கொள்ள அறிவுறுத்திய உயா்நீதிமன்றம், இந்த மனு மீதான அடுத்த விசாரணையை ஜூன் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.