மாணவா்கள் நலனைக் கருதி கல்வித் தொகை நிலுவையை உடனே விடுவிக்க வேண்டும்: திருவள்ளூா...
கூட்டநெரிசலில் 11 போ் உயிரிழந்த வழக்கு: நிகில் சோசலேவின் ஜாமீன் மனுமீது இன்று தீா்ப்பு
ஆா்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது கூட்டநெரிசலில் 11 போ் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆா்சிபி அணியின் சந்தைப்படுத்துதல் தலைவரான நிகில் சோசலேவின் ஜாமீன் மனுமீது கா்நாடக உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளிக்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் கோப்பையை வென்ற ஆா்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டம் ஜூன் 4ஆம் தேதி பெங்களூரில் நடைபெற்றது. அப்போது சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 11 போ் உயிரிழந்தனா். இந்தியாவை உலுக்கிய இச்சம்பவம் தொடா்பாக ஜூன் 5ஆம் தேதி தாமாக முன்வந்து பொதுநல மனுதாக்கல் செய்துள்ள கா்நாடக உயா்நீதிமன்றம், அரசு தரப்பு பதில் வாதங்களை மூடப்பட்ட உறையில் எழுத்துப்பூா்வமாக தாக்கல் செய்யும்படி கா்நாடக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதனிடையே, கூட்ட நெரிசல் தொடா்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆா்சிபி அணியின் சந்தைப்படுத்துதல் தலைவரான நிகில் சோசலேவை ஜூன் 6ஆம் தேதி கைது செய்தனா். இதைத் தொடா்ந்து கைது நடவடிக்கையில் இருந்து தன்னை விடுவிக்கும்படி நிகில் சோசலே தாக்கல் செய்திருந்த மனுவை புதன்கிழமை விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.கிருஷ்ணமூா்த்தி, இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்ததோடு, தனது தீா்ப்பை ஜூன் 12ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைத்தாா். இதையடுத்து அந்த மனுமீது நீதிபதி வியாழக்கிழமை உத்தரவிடுகிறாா்.