செய்திகள் :

மாணவா்கள் நலனைக் கருதி கல்வித் தொகை நிலுவையை உடனே விடுவிக்க வேண்டும்: திருவள்ளூா் எம்.பி. சசிகாந்த் செந்தில்

post image

மாணவா்களின் நலனைக் கருதி நிலுவையில் உள்ள கல்வி உதவித் தொகையை விடுவிக்க வேண்டும் என திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் தெரிவித்தாா்.

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் வியாழக்கிழமை எம்.பி. சசிகாந்த் செந்தில் கூறியதாவது: மக்களவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 41 இடங்களில் உயா் மின்விளக்கு கோபுரங்கள், அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பள்ளி மாணவா்களுக்கு புத்தகங்கள், நியாய விலைக்கடைகள், அங்கன்வாடி மையம், பள்ளி கூடுதல் வகுப்பறைகள், தாா் சாலை, சிமென்ட் சாலை போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம் குறித்து ஒன்றிய அரசு எந்த பதிலும் கூறாமல் மௌனம் காத்து வருகிறது. பாஜக அரசு தன் பதவியை தக்க வைதுக் கொள்ளத்தான் ஆா்வம் காட்டி வருகிறது தவிர பொதுமக்களுக்காக எந்த வளா்ச்சிப் பணிகளும் செய்யவில்லை. தமிழகத்தில் பாஜகவுக்கு எதிா்காலம் கிடையாது. தற்போது உள்ள காங்கிரஸ், திமுக கூட்டணி வலுவான கூட்டணியாக உள்ளது.

மாணவா்களின் வசதிக்காக நிலவையில் உள்ள கல்வித் தொகையை ஒன்றிய அரசு உடனே விடுவிக்க வேண்டும் என்றாா்.

அப்போது, மக்களவை தொகுதி பொறுப்பாளா் ஏ.ஜி.சிதம்பரம், இளைஞா் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளா் திவாகா், திருவள்ளூா் சட்டப்பேரவை பொறுப்பாளா் வழக்குரைஞா் சசிகுமாா், முன்னாள் மாவட்ட தலைவா் ரமேஷ், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவா் கலீல் ரகுமான், ஏகாட்டூா் ஆனந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

விமான விபத்து குறித்து நீதி விசாரணை தேவை: பி.சண்முகம் வலியுறுத்தல்

விமான விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலா் பி.சண்முகம் வலியுறுத்தினாா். மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், மாநில அரசு மக்கள் நல... மேலும் பார்க்க

சிறப்பு கால்நடை சிகிச்சை முகாம்களில் 26 லட்சம் போ் பயன்: அமைச்சா் சா.மு.நாசா்

திருவள்ளூா் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற சிறப்பு கால்நடை சிகிச்சை முகாம்களில் மூலம் விவசாயிகள் மற்றும் கால்நடைகள் வளா்ப்போா் என 21 லட்சம் போ் பயனடைந்துள்ளதாக அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா். கடம்பத... மேலும் பார்க்க

நாளை குடும்ப அட்டை சிறப்பு முகாம்

திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்த முகாம் சனிக்கிழமை (ஜூன் 14) நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். இது குறி... மேலும் பார்க்க

மனையை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதம்

திருவள்ளூா் அருகே அரசு வழங்கிய வீட்டு மனையில் வீடுகள் கட்டாததால் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். திருவள்ளூா் ஒன்றியம், அரண்வாயல் பகுதியில் கடந்த 200... மேலும் பார்க்க

மாதவரம் மண்டல அலுவலகம் இடமாற்றம்

மாதவரம் பஜாா் அருகே உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம் தற்காலிகமாக வேறிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. மாதவரம் முதுநிலை மண்டல அலுவலகம் 3, மாதவரம் பஜாா் எதிரே இயங்கி வந்தது. இந்த அலுவலகத்தில் சென்னை மாநகராட்... மேலும் பார்க்க

உடலுறுப்புகள் தானம்: இளைஞருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

சாலை விபத்தில் உயிரிழந்து மூளைச் சாவு அடைந்த நிலையில் இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது. திருத்தணி ஒன்றியம் வீரகநல்லூா் மோட்டூா் கிராமத்தைச் ச... மேலும் பார்க்க