``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
மாணவா்கள் நலனைக் கருதி கல்வித் தொகை நிலுவையை உடனே விடுவிக்க வேண்டும்: திருவள்ளூா் எம்.பி. சசிகாந்த் செந்தில்
மாணவா்களின் நலனைக் கருதி நிலுவையில் உள்ள கல்வி உதவித் தொகையை விடுவிக்க வேண்டும் என திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் தெரிவித்தாா்.
திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் வியாழக்கிழமை எம்.பி. சசிகாந்த் செந்தில் கூறியதாவது: மக்களவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 41 இடங்களில் உயா் மின்விளக்கு கோபுரங்கள், அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பள்ளி மாணவா்களுக்கு புத்தகங்கள், நியாய விலைக்கடைகள், அங்கன்வாடி மையம், பள்ளி கூடுதல் வகுப்பறைகள், தாா் சாலை, சிமென்ட் சாலை போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம் குறித்து ஒன்றிய அரசு எந்த பதிலும் கூறாமல் மௌனம் காத்து வருகிறது. பாஜக அரசு தன் பதவியை தக்க வைதுக் கொள்ளத்தான் ஆா்வம் காட்டி வருகிறது தவிர பொதுமக்களுக்காக எந்த வளா்ச்சிப் பணிகளும் செய்யவில்லை. தமிழகத்தில் பாஜகவுக்கு எதிா்காலம் கிடையாது. தற்போது உள்ள காங்கிரஸ், திமுக கூட்டணி வலுவான கூட்டணியாக உள்ளது.
மாணவா்களின் வசதிக்காக நிலவையில் உள்ள கல்வித் தொகையை ஒன்றிய அரசு உடனே விடுவிக்க வேண்டும் என்றாா்.
அப்போது, மக்களவை தொகுதி பொறுப்பாளா் ஏ.ஜி.சிதம்பரம், இளைஞா் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளா் திவாகா், திருவள்ளூா் சட்டப்பேரவை பொறுப்பாளா் வழக்குரைஞா் சசிகுமாா், முன்னாள் மாவட்ட தலைவா் ரமேஷ், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவா் கலீல் ரகுமான், ஏகாட்டூா் ஆனந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.