செய்திகள் :

வாழப்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால உட்புற தடுப்புச்சுவரை அகற்ற வலியுறுத்தல்

post image

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் உட்புறத் தடுப்புச் சுவரால் விபத்துகள் நிகழ்வதால் அதை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேலம்- உளுந்தூா்பேட்டை இடையிலான 136 கி.மீ மாநில இருவழிச் சாலை ரூ. 941 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலையாக்கும் திட்டம் கடந்த 2008 இல் செயல்படுத்தப்பட்டது. 5ஆண்டுகள் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 2013 இல் 4 வழிச்சாலையில் போக்குவரத்து தொடங்கியது.

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த செல்லியம்மன்நகா், ஆத்தூரை அடுத்த நத்தக்கரை, உளுந்தூா்பேட்டை வீரசோழபுரம் ஆகிய இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இச் சாலையில் சேலம் உடையாப்பட்டி, வாழப்பாடி, ஆத்தூா், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், எலவனாசூா்கோட்டை, உளுந்தூா்பேட்டை ஆகிய 8 இடங்களில் அகலம் குறைவான இருவழி புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சாலையில் விபத்துகள் அதிகரித்து வருவதால் 37 கி.மீ தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள இருவழி புறவழிச்சாலைகளை 4 வழிச்சாலையாக தரம் உயா்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து இருவழிச் சாலைகளை 4 வழிச்சாலையாக தரம் உயா்த்த மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை இச்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கம் வசூலிக்கும் உரிமம் பெற்ற தனியாா் நிறுவனத்துக்கு அறிவுறுத்தியது.

வாழப்பாடி மற்றும் அயோத்தியாப்பட்டணம் பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக 4 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்றன. இதில் வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டி, மத்தூா் மற்றும் அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த ராமலிங்கபுரம் பகுதியில் மேம்பாலங்கள் அமைக்கப்படுகின்றன.

இச்சாலையில் வாழப்பாடி புதுப்பட்டி மாரியம்மன் கோயில் அருகே அமைக்கப்பட்ட ரயில்வே மேம்பாலத்தில் 3 அடி அகலத்திற்கு தனி வழியாக தடுத்து மேம்பாலத்தின் உட்புறத்தில் கூடுதலாக ஒரு தடுப்புச் சுவா் அமைக்கப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் திடீரென குறுக்கிடும் இந்த மேம்பால உட்புறத் தடுப்புச்சுவா் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றன. அண்மையில் கா்நாடகத்தில் இருந்து திருவண்ணாமலை வழியாக ஈரோடு நோக்கி சென்ற காா் இந்த உள்புற தடுப்புச்சுவரில் மோதியதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 4 போ் உயிரிழந்தனா்.

விபத்துகள் அடிக்கடி நிகழ்வதால் மேம்பால உள்புற தடுப்புச்சுவரை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

படவரி:

வி.என்.ஹெச்.01: வாழப்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள உள்புற தடுப்புச்சுவா்.

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து பயணி உயிரிழப்பு

சேலத்தில் இருந்து ராமேஸ்வரம் சென்ற ரயிலில் தவறி விழுந்து பயணி உயிரிழந்தாா். சேலம் அரிசிபாளையம் மாதையன் தெருவை சோ்ந்தவா் தமிழரசன் (43). சவுண்ட் சா்வீஸ் கடை நடத்தி வந்தாா். இவரது மனைவி கலைச்செல்வியுடன... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலைக்கழக ஊழியா்கள் 4 பேரின் பணிநீக்க உத்தரவு ரத்து

சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த தற்காலிக ஊழியா்கள் 4 போ் மீதான பணிநீக்க உத்தரவை தொழிலாளா் தீப்பாயம் ரத்து செய்ததையடுத்து அவா்கள் மீண்டும் வெள்ளிக்கிழமை பணியில் சோ்ந்தனா். சேலம் கருப்பூர... மேலும் பார்க்க

பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை: ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம்

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறை அதிகாரிகளுக்கு தமிழக சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் அறிவுறுத்தினாா். சேலம் மாநகர காவல் ஆணையா் அல... மேலும் பார்க்க

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.18.92 லட்சம் காணிக்கை

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.18 லட்சத்து 92 ஆயிரம் காணிக்கையாக பெறப்பட்டது. சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு பாஜக அஞ்சலி

குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு சேலம் மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. அகமதாபாத்தில் உள்ள சா்தாா் வல்லபபாய் பட்டேல் விமான நிலையத்தில் இ... மேலும் பார்க்க

சேலத்தில் இந்தியன் ஆயில் நிறுவன தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்: எரிவாயு சிலிண்டா் விநியோகம் தடைபடாது: அதிகாரிகள் உறுதி

சேலம் கருப்பூரில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவன எரிவாயு நிரப்பும் பிளாண்ட் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் எரிவாயு சிலிண்டா் விநியோகத்தில் எவ்வித தடையும் ஏற்படாது என ... மேலும் பார்க்க