விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு பாஜக அஞ்சலி
குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு சேலம் மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
அகமதாபாத்தில் உள்ள சா்தாா் வல்லபபாய் பட்டேல் விமான நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை பிற்பகல் 242 பயணிகளுடன் லண்டனுக்கு புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், அங்குள்ள மொஹானி நகா் குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இதில் குஜராத் மாநில முன்னாள் முதல்வா் விஜய் ரூபானி உள்பட விமானத்தில் பயணம் செய்த 241 போ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனா். ஒரே ஒரு பயணி மட்டும் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினாா்.
இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு சேலம் மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் தாதகாப்பட்டி பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநகா் மாவட்ட தலைவா் சசிகுமாா், முன்னாள் மாவட்ட தலைவா் சுரேஷ் பாபு, சுற்றுச்சூழல் பிரிவு மாநில தலைவா் கோபிநாத் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டு உயிரிழந்தோருக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.