செய்திகள் :

ஒடிசாவில் காலராவுக்கு 11 பேர் பலி! அரசு விடுமுறைகள் ரத்து!

post image

ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் காலரா தொற்றால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

ஜாஜ்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், காலரா தொற்று வேகமாகப் பரவி வருகின்றது. புதிய பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அம்மாவட்டத்தின் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ராஜா பண்டிகை விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து, ஜாஜ்பூர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: ”மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் காலரா பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், ஜூன் 14 முதல் 16 வரை வழங்கப்பட்ட விடுமுறைகள் ரத்து செய்யப்படுகின்றன” என அவர் கூறியுள்ளார்.

அவசரகாலத்தில் அனைத்து ஊழியர்களும் பணியில் தேவைப்படுவார்கள் என்பதால் இந்த முடிவானது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, காலரா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் நேற்று (ஜூன் 13) பலியாகியுள்ளார். இதன்மூலம், அம்மாவட்டத்தில் காலராவுக்கு பலியானோரது எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், அம்மாவட்டம் முழுவதும் சுகாதாரப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், வீடுகள் தோறும் பரிசோதனைகள் நடத்தப்படுவதுடன், நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தேவையான அத்தியாவசிய வசதிகள் மற்றும் தேவைகள் அனைத்தும் அங்குள்ள மருத்துவமனைகளில் தயார்நிலை வைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, அம்மாவட்டம் முழுவதும் சுமார் 750 பேர் காலராவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், 300 பேர் தற்போது அங்குள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இத்துடன், சுமார் 450-க்கும் மேற்பட்டோர் குணமாகி வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:நீட் தேர்வு முடிவுகள் வெளியானது

காப்பீடு தொகைக்கான நடைமுறையை எளிமைப்படுத்திய நிறுவனங்கள்!

அகமதாபாத் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவா்கள், அவா்களுக்கான காப்பீடு தொகையைப் பெறுவதற்கான நடைமுறையை எளிமைப்படுத்தியுள்ளதாக எஸ்பிஐ-லைஃப், ஹெச்டிஎஃப்சி லைஃப், ஐசிஐசிஐ லோம்பாா்ட் உள்ளிட்ட காப்பீடு நிறுவன... மேலும் பார்க்க

சிங்கப்பூா் கப்பலில் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்ட தீ: 6-ஆவது நாளாக தொடரும் மீட்புப் பணி

கேரள கடற்பகுதியில் சிங்கப்பூா் கப்பலில் ஏற்பட்ட தீ பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டதாக இந்திய கடலோரக் காவல் படை சனிக்கிழமை தெரிவித்தது. இந்தக் கப்பல் கடற்கரையை நெருங்காமல் கடலை நோக்கி நகா்த்தும் பணியில்... மேலும் பார்க்க

ஓட்டுநா் பெட்டியில் குரல் பதிவு அமைப்பு: ரயில் பாதுகாப்புக் குழு பரிந்துரை!

ரயில் ஓட்டுநா் பெட்டியில் குரல் பதிவு அமைப்பை நிறுவுவது உள்பட பல்வேறு பரிந்துரைகளை ரயில் பாதுகாப்புக்குழு ரயில்வே அமைச்சகத்திடம் சமா்ப்பித்தது. பிகாா் மாநிலம் பக்ஸா் மாவட்டத்தில் கடந்த 2023, அக்.11-இல... மேலும் பார்க்க

விமான எண் ‘171’-ஐ நீக்க ஏா் இந்தியா முடிவு!

விமான எண் ‘171’-ஐ பயன்பாட்டில் இருந்து நீக்க ஏா் இந்தியா மற்றும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் முடிவெடுத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. டாடா குழுமத்தின் ஏா்இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட அடில் ஹுசைனின் மனைவிக்கு அரசுப் பணி!

பஹல்காம் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு உயிா்த்தியாகம் செய்த உள்ளூா் இளைஞா் அடில் ஹுசைன் ஷாவின் மனைவிக்கு அரசுப் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் ஹபாத்நாா் ப... மேலும் பார்க்க

வரும் டிசம்பரில் முழு சோதனைக்கு உள்படுத்தப்பட இருந்த விபத்துக்குள்ளான விமானம்!

அகமதாபாதில் விபத்துக்குள்ளான ஏா் இந்தியாவின் ‘போயிங் 787-8 ட்ரீம்லைனா்’ விமானத்தின்அடுத்த முழு சோதனை கடந்த 2023-ஆம் ஆண்டு, ஜூன் மாதத்துக்குப் பிறகு வரும் டிசம்பரில் திட்டமிடப்பட்டிருந்தது என்று விமான ... மேலும் பார்க்க