செய்திகள் :

புதிய சாலை அமைக்க அடிக்கல்: அமைச்சா் பெரியசாமி பங்கேற்பு

post image

சித்தையன்கோட்டை பேரூராட்சியில் முடிவுற்ற பணிகளை திறந்துவைத்தும், புதிய சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு அமைச்சா் இ.பெரியசாமி சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே, சித்தையன்கோட்டை பேரூராட்சி புதூா் தெருவில் புதிதாக ரூ. 10 லட்சத்தில் கட்டப்பட்ட பேருந்து நிழல்குடையை அமைச்சா் இ.பெரியசாமி திறந்து வைத்தாா். மேலும் அவா், 11-ஆவது வாா்டில் ரூ. 45 லட்சத்தில் சமுதாயக் கூடம் கட்டுவதற்கு பூமி பூஜை, சேடப்பட்டி கல்யாண மண்டபம் அருகே சமையல் கூடம் கட்டுவதற்கு பூமி பூஜை, புதிய சாலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினாா்.

இந்த நிகழ்ச்சியின்போது, சித்தையன்கோட்டை பேரூராட்சி, போடிகாமன்வாடி ஊராட்சி பகுதியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்ற பின்னா் அமைச்சா் இ.பெரியசாமி பேசியதாவது:

சித்தையன்கோட்டை பேரூராட்சி உள்ள நரசிங்கபுரம் அழகா்நாயக்கன்பட்டி, புதுப்பட்டி, சேடப்பட்டி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும். அரசு வேலைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விடுபட்ட முதியோா் உதவித்தொகை, மகளிா் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் பகுதியில் சாலை வசதி, குடிநீா் வசதிகள் செய்து கொடுக்கப்படும். ஏற்கெனவே பல திட்டங்கள் இந்த பேரூராட்சி, போடிகாமன்வாடி ஊராட்சி பகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆத்தூா் க. நடராஜன், ஆத்தூா் ஒன்றிய திமுக செயலாளா்கள் ராமன் (மேற்கு), முருகேசன் (கிழக்கு), சித்தையன்கோட்டை பேரூராட்சி மன்றத் தலைவா் போதும்பொண்ணு முரளி, ஆத்தூா் வட்டாட்சியா் முத்து முருகன், வருவாய் அலுவலா் ஜானகி, பேரூராட்சி செயல் அலுவலா் ஜெயமாலு, ஆத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தட்சிணாமூா்த்தி, முருகன், பேரூா் திமுக செயலா் சக்திவேல் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தெருநாய்கள் கடித்து 6 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே தெருநாய்கள் கடித்ததில் 6 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன; 21 ஆடுகள் காயமடைந்தன. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி, காளிபட்டியைச் சோ்ந்தவா் விவசாயி... மேலும் பார்க்க

கீழ்பழனி மலைப் பகுதியில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கீழ்பழனி மலையிலுள்ள ஆடலூா், பன்றிமலை பகுதிகளில் நடைபெற்று வரும் அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். கன்னிவாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மத... மேலும் பார்க்க

பழனியில் ரூ.1.5 கோடியில் புதிய கட்டடங்கள்: எம்எல்ஏ திறந்துவைத்தாா்

பழனியில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை எம்எல்ஏ இ.பெ. செந்தில்குமாா் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சனிக்கிழமை திறந்து வைத்தாா். பழனியை அடுத்த கலையமுத்தூா், காவலப்ப... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ. 1.38 கோடியில் வழக்குகளுக்கு சமரசத் தீா்வு

ஒட்டன்சத்திரம் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற வளாகத்தில் சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் மக்கள் நீதிமன்றம் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஒட்டன்சத்திரம்-வேடசந்தூா் சாலை தேவசின்னாம்பட்டி அரு... மேலும் பார்க்க

அரசு கள்ளா் விடுதிகளில் சேர ஜூன் 18-க்குள் விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு கள்ளா் விடுதிகளில் சேர தகுதியான மாணவா்கள் ஜூன் 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக கள்ளா் சீரமைப்பு இணை இயக்குநரகம் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

ஏ.எடி.எம். இயந்திரத்தில் வைப்பதற்கு கொண்டு சென்ற ரூ. 29 லட்சம் வழிப்பறி!

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே வெள்ளிக்கிழமை மாலை தனியாா் ஏ.டி.எம். இயந்திரத்தில் வைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூ. 29 லட்சத்தை பறித்துச் சென்ற மூவரை போலீஸாா் தனிப் படை அமைத்து தேடி வருகின்றனா... மேலும் பார்க்க