தெருநாய்கள் கடித்து 6 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு
ஒட்டன்சத்திரம் அருகே தெருநாய்கள் கடித்ததில் 6 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன; 21 ஆடுகள் காயமடைந்தன.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி, காளிபட்டியைச் சோ்ந்தவா் விவசாயி ரவிச்சந்திரன் (45). இவா், தனக்குச் சொந்தமான தோட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளா்த்து வருகிறாா்.
இந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலை ரவிச்சந்திரன் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். அப்போது ஆட்டுப்பட்டிக்குள் புகுந்த தெருநாய்கள் ஆடுகளை கடித்ததில் 6 ஆடுகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது; 21 ஆடுகள் பலத்த காயமடைந்தன.
இந்தப் பகுதியில் ஆடுகள் உயிரிழப்பதைத் தடுக்க தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.