மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் மாற்றம்!
பழனியில் ரூ.1.5 கோடியில் புதிய கட்டடங்கள்: எம்எல்ஏ திறந்துவைத்தாா்
பழனியில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை எம்எல்ஏ இ.பெ. செந்தில்குமாா் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
பழனியை அடுத்த கலையமுத்தூா், காவலப்பட்டி, வாடிப்பட்டி, சின்னக்கலையமுத்தூா் ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 1.5 கோடியில் புதிய நியாய விலைக் கடை கட்டடம், அங்கன்வாடி மையம், ஊராட்சி மன்ற அலுவலகம், பயணிகள் நிழல்குடை, விவசாயப் பொருள்கள் வைக்கும் மையம் என பல்வேறு பணிகள் நிறைவடைந்தன. இந்த நிலையில் பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ. செந்தில்குமாா் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சனிக்கிழமை திறக்கப்பட்டது.
கலையமுத்தூரில் புதிய நியாய விலைக் கட்டடத்தை திறந்து வைத்த அவா், குடும்ப அட்டைதாரா்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினாா். மேலும், நியாய விலைக் கடைகளுக்கு புதிதாகத் தோ்வு செய்யப்பட்ட பணியாளா்களுக்கும் பணி நியமன ஆணைகளை அவா் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் பழனி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் வேதா, திமுக ஒன்றியச் செயலா் சௌந்தரபாண்டியன், இளைஞரணித் தலைவா் லோகநாதன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள், கழக நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.