38 வயதில் ஆட்ட நாயகன் விருதுபெற்ற கோல்கீப்பர்: யார் இந்த ஆஸ்கர் உஸ்தாரி?
கிளப் உலகக் கோப்பையின் முதல் போட்டியில் அசத்திய 38 வயது கோல்கீப்பர் ஆஸ்கர் உஸ்தாரி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இன்டர் மியாமி அணியும் அல்-அஹ்லி அணியும் முதல் போட்டியில் மோதின. இந்தப் போட்டியில் இரு அணிகளுமே கோல் அடிக்காமல் போட்டியை முடித்தது.
இன்டர் மியாமி அணியின் கோல் கீப்பர் ஆஸ்கர் உஸ்தாரி பெனால்டி உள்பட 8 கோல்களை அசத்தலாக தடுத்து நிறுத்தினார்.

57 சதவிகிதம் பந்தினை கட்டுப்பாட்டுக்குள் வைத்த இன்டர் மியாமி அணி 266 பாஸ்களை செய்து அசத்தியது. மெஸ்ஸி அதிகபட்சமாக கோல் அடிக்க 7 முறை முயற்சித்தார்.
இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக ஆஸ்கர் உஸ்தாரி தேர்வானார். ஆர்ஜெர்ன்டீன வீரரான இவருக்கு 38 வயதாகிறது.
கால்பந்து கிளப் பச்சுகா அணிக்காக 2020-23 ஆண்டுகளில் 123 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
நல்ல திறமை இருந்தும் அதை வெளிப்படுத்தாத வீரர் என இவரை வர்ணனையாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஆர்ஜெண்டீன அணிக்காக 2 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள இவர் இன்டர் மியாமி அணிக்காக செப்.2024இல் தேர்வானார்.
A goalkeeper battle in Miami!#FIFACWC
— FIFA Club World Cup (@FIFACWC) June 15, 2025