அஞ்சான் ரீ - எடிட்டிங் திட்டத்தில் லிங்குசாமி!
அஞ்சான் திரைப்படத்தை மீண்டும் எடிட்டிங் செய்து மறுவெளியீடு செய்ய இயக்குநர் லிங்குசாமி திட்டமிட்டுள்ளார்.
இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த அஞ்சான் திரைப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
ஆனாலும், வித்தியாசமான தோற்றத்தில் நடித்த சூர்யாவின் நடிப்பு பாராட்டுக்களைப் பெற்றதுடன் வசூலில் வெற்றிப்படமானது.
நடிகை சமந்தாவுக்கும் முக்கிய திரைப்படமாக இருந்தது. இப்படம் 10 ஆண்டுகளை நிறைவு செய்ததால், இதனை மறுவெளியீடு செய்ய லிங்குசாமி கடந்த ஆண்டே முடிவு செய்தார். ஆனால், வெளியாகவில்லை.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய லிங்குசாமி, “அஞ்சான் திரைப்படத்தை ஹிந்தியில் டப்பிங் செய்ய வாங்கியவர்கள் சிறப்பாக மறுஎடிட்டிங் செய்து வெளியிட்டுள்ளனர். அதே வடிவத்தை தமிழிலும் ரீ-எடிட் செய்து மறுவெளியீடு செய்யத் திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
விரைவில் மறுவெளியீட்டுத் தேதியை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றனர்: ஜோனிடா காந்தி