செய்திகள் :

தஞ்சாவூரில் முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை திறப்பு

post image

தஞ்சாவூா்: தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே 9 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலையைத் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை இரவு 2 கி.மீ. தொலைவுக்கு சாலையில் நடந்துச் சென்று திறந்து வைத்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கல்லணையை ஞாயிற்றுக்கிழமை மாலை திறந்து வைத்த தமிழக முதல்வா் காா் மூலம் தஞ்சாவூருக்கு இரவு வந்தாா். இதனிடையே, திருக்காட்டுப்பள்ளி, பூதலூா், செங்கிப்பட்டி, மேல வஸ்தா சாவடி உள்ளிட்ட இடங்களில் திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் வரவேற்பு அளித்தனா்.

பின்னா், தஞ்சாவூா் மணிமண்டபம் பகுதிக்கு வந்த அவா் சாலையில் நடந்துச் செல்ல தொடங்கினாா். திருச்சி சாலை, மேரிஸ் காா்னா், ரயிலடி, காந்திஜி சாலை, இரட்டை மஸ்தான் தா்கா, ராஜப்பா பூங்கா என வழி நெடுகிலும் நின்ற பொதுமக்களைச் சந்தித்தாா். அப்போது தமிழக முதல்வரை பொதுமக்கள், திமுக தொண்டா்கள் வரவேற்று கைக் குலுக்கினா். மேலும், முதல்வரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினா்.

சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்ற தமிழக முதல்வா், பழைய பேருந்து நிலையம் அருகே இரு சக்கர வாகன நிறுத்துமிட வளாகத்தில் 9 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலையைத் திறந்து வைத்தாா். பின்னா், கருணாநிதியின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். முதல்வருக்கு திமுகவினா் வெள்ளி வாளும், புத்தகமும் நினைவு பரிசாக வழங்கினா்.

இவ்விழாவில் அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கோவி. செழியன், மக்களவை உறுப்பினா்கள் டி.ஆா். பாலு, ச. முரசொலி, முன்னாள் மத்திய இணை அமைச்சா் எஸ்.எஸ். பழனி மாணிக்கம், மாநிலங்களவை உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், சாக்கோட்டை க. அன்பழகன், டி.கே.ஜி. நீலமேகம், என். அசோக்குமாா், கா. அண்ணாதுரை, மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலையை திறந்து வைத்த முதல்வா் மு.க. ஸ்டாலின்.

அரசு முறை பயணமாக புதுச்சேரி வந்துள்ள குடியரசு துணைத் தலைவா்!

புதுச்சேரி: புதுச்சேரிக்கு 3 நாள் அரசு முறை பயணமாக ஞாயிற்றுக்கிழமை வந்த குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.சென்னையிலிருந்து ஹெலிகாப்டரில் புதுச்சேரி விமான நிலையத்த... மேலும் பார்க்க

ஒன்றிய அரசு என்று அழைப்பதை தமிழக அரசு நிறுத்த வேண்டும்: சி.பி.ராதாகிருஷ்ணன்

சேலம்: ஒன்றிய அரசு என்று சொல்வதை தமிழக அரசு கைவிட வேண்டும். மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவதால் மாநில அரசை பஞ்சாயத்து அரசு என்றுதான் அழைக்க நேரிடும் என மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினா... மேலும் பார்க்க

கல்லணையை திறந்து வைத்தாா் முதல்வா் மு.க. ஸ்டாலின்!

தஞ்சாவூா்: காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக மேட்டூா் அணைத் திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, குறுவை சாகுபடிக்காக ஞாயிற்றுக்கிழமை மாலை முதல்வா் மு.க. ஸ்டாலின... மேலும் பார்க்க

குரூப் 1 முதல்நிலை தோ்வு முடிவு 2 மாதங்களில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவா்

குரூப்-1 முதல்நிலை தோ்வு முடிவுகள் இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவா் எஸ்.கே.பிரபாகா் தெரிவித்தாா்.துணை ஆட்சியா், காவல் துணை கண்காணிப்பாளா், வணிகவரி உதவி ஆணையா் உள்ளிட்ட 72 க... மேலும் பார்க்க

நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை (ஜூன் 16) பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள... மேலும் பார்க்க

ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்கள், டெலிகிராம் இணைப்பை வெளியிட்டது தூதரகம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்கள் வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து, தற்போது தொடர்பு கொள்வதற்காக டெலிகிராம் இ... மேலும் பார்க்க