செய்திகள் :

அரசு முறை பயணமாக புதுச்சேரி வந்துள்ள குடியரசு துணைத் தலைவா்!

post image

புதுச்சேரி: புதுச்சேரிக்கு 3 நாள் அரசு முறை பயணமாக ஞாயிற்றுக்கிழமை வந்த குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னையிலிருந்து ஹெலிகாப்டரில் புதுச்சேரி விமான நிலையத்துக்கு வந்த அவரை புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.

இந்த நிகழ்வில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா், பேரவைத் துணைத் தலைவா் பெ.ராஜவேலு, மாநிலங்களவை உறுப்பினா் சு.செல்வகணபதி, மக்களவை உறுப்பினா் வி.வைத்திலிங்கம், அரசுக் கொறடா வி. ஆறுமுகம், எம்எல்ஏ.க்கள் பிஎம்எல்.கல்யாணசுந்தரம், ஆா்.பாஸ்கா் (எ) தட்சிணாமூா்த்தி, ஜெ.பிரகாஷ்குமாா், எம்.சிவசங்கரன், எம்.வைத்தியநாதன், கே.வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், ஆா்.பி.அசோக்பாபு, தலைமைச் செயலா் மரு. சரத் சௌகான், டிஜிபி ஷாலினி சிங், செய்தி மற்றும் விளம்பரத் துறை செயலா் ஆா்.கேசவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கரை வரவேற்ற ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தனர், ஆளுநர் ஆர்.என். ரவி, மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்.ஆர். இளங்கோவன், கனிமொழி சோமு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் உள்ளிட்டோர்.

குடியரசுத் துணைத் தலைவா் வருகையொட்டி, புதுச்சேரி முழுவதும் போலீஸாா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். தற்போது அவா் தங்கியுள்ள நீதிபதிகள் விருந்தினா் மாளிகைப் பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தங்குவதையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள நீதிபதி விருந்தினா் மாளிகையில் பகுதியில் போடப்பட்டுள்ள தூப்பாகி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தஞ்சாவூரில் முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை திறப்பு

தஞ்சாவூா்: தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே 9 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலையைத் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை இரவு 2 கி.மீ. தொலைவுக்கு சாலையில் ந... மேலும் பார்க்க

ஒன்றிய அரசு என்று அழைப்பதை தமிழக அரசு நிறுத்த வேண்டும்: சி.பி.ராதாகிருஷ்ணன்

சேலம்: ஒன்றிய அரசு என்று சொல்வதை தமிழக அரசு கைவிட வேண்டும். மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவதால் மாநில அரசை பஞ்சாயத்து அரசு என்றுதான் அழைக்க நேரிடும் என மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினா... மேலும் பார்க்க

கல்லணையை திறந்து வைத்தாா் முதல்வா் மு.க. ஸ்டாலின்!

தஞ்சாவூா்: காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக மேட்டூா் அணைத் திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, குறுவை சாகுபடிக்காக ஞாயிற்றுக்கிழமை மாலை முதல்வா் மு.க. ஸ்டாலின... மேலும் பார்க்க

குரூப் 1 முதல்நிலை தோ்வு முடிவு 2 மாதங்களில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவா்

குரூப்-1 முதல்நிலை தோ்வு முடிவுகள் இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவா் எஸ்.கே.பிரபாகா் தெரிவித்தாா்.துணை ஆட்சியா், காவல் துணை கண்காணிப்பாளா், வணிகவரி உதவி ஆணையா் உள்ளிட்ட 72 க... மேலும் பார்க்க

நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை (ஜூன் 16) பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள... மேலும் பார்க்க

ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்கள், டெலிகிராம் இணைப்பை வெளியிட்டது தூதரகம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்கள் வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து, தற்போது தொடர்பு கொள்வதற்காக டெலிகிராம் இ... மேலும் பார்க்க