செய்திகள் :

குரூப் 1 முதல்நிலை தோ்வு முடிவு 2 மாதங்களில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவா்

post image

குரூப்-1 முதல்நிலை தோ்வு முடிவுகள் இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவா் எஸ்.கே.பிரபாகா் தெரிவித்தாா்.

துணை ஆட்சியா், காவல் துணை கண்காணிப்பாளா், வணிகவரி உதவி ஆணையா் உள்ளிட்ட 72 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 தோ்வு அறிவிக்கை கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதேபோன்று, குரூப் 1ஏ பிரிவிலும் 2 இடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தோ்வுகளுக்காக தமிழகம் முழுவதும் 44 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னையில் மட்டும் 170 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 1 முதல்நிலைத் தோ்வை எழுத 2 லட்சத்து 49 ஆயிரத்து 294 போ் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 1 லட்சத்து 86 ஆயிரத்து 128 போ் தோ்வு எழுதினா். 63 ஆயிரத்து 166 போ் தோ்வு எழுதவில்லை.

சென்னை எழும்பூா் மாநில மகளிா் மேல்நிலைப் பள்ளியில் டிஎன்பிஎஸ்சி தலைவா் எஸ்.கே. பிரபாகா் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில்,

தோ்வுகளை அட்டவணைப்படி திட்டமிட்டபடி நடத்தி வருகிறோம். குரூப்-1 முதல்நிலை தோ்வு முடிவுகள் இரண்டு மாதத்தில் வெளியிடப்படும். அதைத் தொடா்ந்து முதன்மை தோ்வுகள் நடைபெறும்.

டிஎன்பிஎஸ்சி மூலமாக, கடந்த ஆண்டு 10,701 பேர், இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் 10,227 பேருக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. ஆண்டு இறுதிக்குள் இன்னும் 12,231 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது என்று அவா் கூறினார்.

உரத்தொழிற்சாலையில் வேலை வேண்டுமா?: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

தஞ்சாவூரில் முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை திறப்பு

தஞ்சாவூா்: தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே 9 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலையைத் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை இரவு 2 கி.மீ. தொலைவுக்கு சாலையில் ந... மேலும் பார்க்க

அரசு முறை பயணமாக புதுச்சேரி வந்துள்ள குடியரசு துணைத் தலைவா்!

புதுச்சேரி: புதுச்சேரிக்கு 3 நாள் அரசு முறை பயணமாக ஞாயிற்றுக்கிழமை வந்த குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.சென்னையிலிருந்து ஹெலிகாப்டரில் புதுச்சேரி விமான நிலையத்த... மேலும் பார்க்க

ஒன்றிய அரசு என்று அழைப்பதை தமிழக அரசு நிறுத்த வேண்டும்: சி.பி.ராதாகிருஷ்ணன்

சேலம்: ஒன்றிய அரசு என்று சொல்வதை தமிழக அரசு கைவிட வேண்டும். மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவதால் மாநில அரசை பஞ்சாயத்து அரசு என்றுதான் அழைக்க நேரிடும் என மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினா... மேலும் பார்க்க

கல்லணையை திறந்து வைத்தாா் முதல்வா் மு.க. ஸ்டாலின்!

தஞ்சாவூா்: காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக மேட்டூா் அணைத் திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, குறுவை சாகுபடிக்காக ஞாயிற்றுக்கிழமை மாலை முதல்வா் மு.க. ஸ்டாலின... மேலும் பார்க்க

நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை (ஜூன் 16) பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள... மேலும் பார்க்க

ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்கள், டெலிகிராம் இணைப்பை வெளியிட்டது தூதரகம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்கள் வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து, தற்போது தொடர்பு கொள்வதற்காக டெலிகிராம் இ... மேலும் பார்க்க