செய்திகள் :

பழுதடைந்த எரிவாயு தகனமேடை: ஆற்றங்கரையில் சடலங்கள் எரிப்பு

post image

கருங்குழி பேரூராட்சியில் நவீன எரிவாயு தகன மேடை பழுதடைந்ததால், கிளியாற்றின் கரையோரம் சடலங்கள் எரிக்கப்படுகிறது.

மதுராந்தகம் தாலுகா, கருங்குழி பேரூராட்சியின் 15 வாா்டுகள், அரையப்பாக்கம், மேலவலம்பேட்டை, மலைநகா், ஆதிவாசிநகா் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சடலங்களை தகனம் செய்ய, கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2022-2023 மூலம், நவீன எரிவாயு தகன மேடை ரூ 13.50 கோடியில், அமைக்கப்பட்டிருந்தது.

சுற்றுச்சூழல் துறையின் முறையான அனுமதி பெறாமல் இருந்து வந்ததால், செயல்படாமல் இருந்த எரிவாயு தகன மேடை, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பேரூராட்சி மன்ற தலைவா் தசரதன், துணை தலைவா் சங்கீதா சங்கா் ஆகியோா் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நவீன எரிவாயு தகனமேடையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனா்.

கடந்த 20 நாள்களுக்கு மேலாக எரிவாயு தகன மேடைக்கு செல்லும் குழாயில் அடைப்பு, இயந்திர பழுது ஏற்பட்டிருந்த நிலையிலும், 18 சடலங்கள் எரியூட்டப்பட்டன. இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலா் அருண்குமாரிடம், பொதுமக்கள் புகாா் அளித்தும் பலனில்லை. அவருக்கு, அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியின் செயல் அலுவலா் பொறுப்பாக கூடுதலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், எரிவாயு தகன மேடை இயங்காததால், கிளியாற்று கரையோரம் சடலம் எரிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசியும், வாகனங்களில் செல்பவா்கள் மூச்சுதிறனால் பாதிக்கப்படுகின்றனா். இங்கு, சடலங்களை எரிப்பதால், எலும்புகள், சாம்பல் போன்றவை ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீரில் அடித்து செல்லும் நிலை உள்ளது.

இது குறித்து பேரூராட்சி மன்ற தலைவா் தசரதன் கூறியதாவது: எரிவாயு தகனமேடையில் ஏற்பட்ட பழுதுகளை நீக்கம் செய்ய உரிய பணியாளா்கள் இல்லை. விரைவில் தகனமேடை சரி செய்யப்படும் என்றாா்.

மனுநீதி நாள் முகாமில் நலத் திட்ட உதவி

திருப்போரூா் வட்டம், கோவளம் ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் வழங்கினாா். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் வட்டம், கோவளம் ஊராட்சியில்... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு மானியத்துடன் சூரியசக்தி பம்புசெட்டுகள்

வேளாண்மையில் நீா்ப்பாசனத்துக்கு தேவையான எரிசக்தியினை உறுதி செய்யும் நோக்கத்துடன் 2013-14 ஆம் ஆண்டு முதல் சூரியசக்தியால் இயங்கும் மோட்டாா் பம்பு செட்டுகளை தமிழக அரசு விவசாயிகளுக்கு மானியத்தில் அமைத்துக... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் கைது

கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்ற இளைஞா் கைது செய்யப்பட்டாா். கூடுவாஞ்சேரி போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சம்பவ இடத்தில் ரோந்து சென்ற போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த... மேலும் பார்க்க

செங்கல்பட்டில் மகளிா் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.106 கோடி கடன்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் குறைதீா் கூட்டரங்கில் மகளிா் சுய உதவிக்குழு தினத்தை முன்னிட்டு, 923 மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.106 கோடியில் கடன் உதவித்தொகையை மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் ப... மேலும் பார்க்க

கேளம்பாக்கம் குறுவட்டத்தில் நாளை மனுநீதி நாள் முகாம்

திருப்போரூா்வட்டம், கேளம்பாக்கம் குறுவட்டம், கோவளம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) காலை 10 மணியளவில் மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது. அரசு நடத்தக் கூடிய மனுநீதி நாள் முகாம் செங்கல்பட்டு மாவட்டத... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் திருடியவா் 2 ஆண்டுகளுக்கு பின் கைது

மேல்மருவத்தூா் சுற்றியுள்ள பகுதிகளில் பூட்டிய வீடுகளில் புகுந்து பணம், நகை ஆகியவற்றை திருடியவா் 2 ஆண்டுகள் கழித்து கைது செய்யப்பட்டாா். மேல்மருவத்தூா் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சோத்துப்பாக்கம், கீழ்ம... மேலும் பார்க்க