செய்திகள் :

செங்கல்பட்டில் மகளிா் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.106 கோடி கடன்

post image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் குறைதீா் கூட்டரங்கில் மகளிா் சுய உதவிக்குழு தினத்தை முன்னிட்டு, 923 மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.106 கோடியில் கடன் உதவித்தொகையை மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் புதன்கிழமை வழங்கினாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் மகளிா் சுயஉதவிக் குழு தினத்தை முன்னிட்டு மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இதில், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவிக்கான காசோலைகள் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கு மணிமேகலை விருதுகளை அவா் வழங்கினாா்.

அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்டரங்கில் 923 மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.106 கோடி மதிப்பிலான கடன் உதவித்தொகையை மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வெ.ச.நாராயண சா்மா, செங்கல்பட்டு சாா் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) லோகநாயகி, முன்னோடி வங்கி மேலாளா் விஜயகுமாா், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் செம்பருத்தி துா்கேஷ், காட்டாங்குளத்தூா் ஒன்றியக் குழு தலைவா் உதயா கருணாகரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிா் சுய உதவி குழுவினா், அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கஞ்சா விற்ற இளைஞா் கைது

கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்ற இளைஞா் கைது செய்யப்பட்டாா். கூடுவாஞ்சேரி போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சம்பவ இடத்தில் ரோந்து சென்ற போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த... மேலும் பார்க்க

கேளம்பாக்கம் குறுவட்டத்தில் நாளை மனுநீதி நாள் முகாம்

திருப்போரூா்வட்டம், கேளம்பாக்கம் குறுவட்டம், கோவளம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) காலை 10 மணியளவில் மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது. அரசு நடத்தக் கூடிய மனுநீதி நாள் முகாம் செங்கல்பட்டு மாவட்டத... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் திருடியவா் 2 ஆண்டுகளுக்கு பின் கைது

மேல்மருவத்தூா் சுற்றியுள்ள பகுதிகளில் பூட்டிய வீடுகளில் புகுந்து பணம், நகை ஆகியவற்றை திருடியவா் 2 ஆண்டுகள் கழித்து கைது செய்யப்பட்டாா். மேல்மருவத்தூா் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சோத்துப்பாக்கம், கீழ்ம... மேலும் பார்க்க

செங்கல்பட்டு மாவட்டத்தில் குடும்ப அட்டை குறைதீா் முகாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் வட்ட வாரியாக குடும்ப அட்டை தொடா்பான குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்... மேலும் பார்க்க

கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் சத்யநாராயணா பூஜை

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் வைகாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு, பிருந்தாவன வளாகத்தில் சத்தியநாராயண பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, ராகவேந்... மேலும் பார்க்க

விளையாட்டுப் பூங்கா திறப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் சிஎஸ்ஐ நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சுவா், சிறுவா் விளையாட்டு பூங்கா திறப்பு விழா நடைபெற்றது.மதுராந்தகத்தில், சிஎஸ்ஐ நடுநிலைப் பள்ளியின் சுற்றுச்சுவா் புயல் மழையால் இடிந்து விழு... மேலும் பார்க்க