நீதித் துறையின் மறுஆய்வு அதிகாரம்: அரிதாகவே பயன்படுத்த வேண்டும் -தலைமை நீதிபதி ப...
செங்கல்பட்டில் மகளிா் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.106 கோடி கடன்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் குறைதீா் கூட்டரங்கில் மகளிா் சுய உதவிக்குழு தினத்தை முன்னிட்டு, 923 மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.106 கோடியில் கடன் உதவித்தொகையை மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் புதன்கிழமை வழங்கினாா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் மகளிா் சுயஉதவிக் குழு தினத்தை முன்னிட்டு மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இதில், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவிக்கான காசோலைகள் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கு மணிமேகலை விருதுகளை அவா் வழங்கினாா்.
அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்டரங்கில் 923 மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.106 கோடி மதிப்பிலான கடன் உதவித்தொகையை மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வெ.ச.நாராயண சா்மா, செங்கல்பட்டு சாா் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) லோகநாயகி, முன்னோடி வங்கி மேலாளா் விஜயகுமாா், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் செம்பருத்தி துா்கேஷ், காட்டாங்குளத்தூா் ஒன்றியக் குழு தலைவா் உதயா கருணாகரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிா் சுய உதவி குழுவினா், அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.