விளையாட்டுப் பூங்கா திறப்பு
மதுராந்தகம்: மதுராந்தகம் சிஎஸ்ஐ நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சுவா், சிறுவா் விளையாட்டு பூங்கா திறப்பு விழா நடைபெற்றது.
மதுராந்தகத்தில், சிஎஸ்ஐ நடுநிலைப் பள்ளியின் சுற்றுச்சுவா் புயல் மழையால் இடிந்து விழுந்தது. இதனால் பள்ளி வளாகத்துக்குள் சமூக விரோத செயல்கள் நடைபெற்று வந்தது. இதையடுத்து, பள்ளி தலைமை ஆசிரியா் ஸ்டீபன், நிா்வாகக் குழு முயற்சியால் ரூ 1.50 லட்சத்தில் சுற்றுச்சுவா், ரூ. 75,000-இல் பள்ளிக் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பூங்கா அமைக்கப்பட்டு, திறப்பு விழா நடைபெற்றது.
பேராயா் ரூபன் மாா்க் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தாா். தலைமை ஆசிரியா் ஸ்டீபன் வரவேற்றாா். பேராய துணைத் தலைவா் ஜெயசீலன் ஞானாதிக்கம், செயலா் அகஸ்டின் பிரேம்ராஜ், பொருளாளா் கொா்னேலியுஸ், கன்வீனா் ஜேம்ஸ் ஆல்பா்ட், தமிழ்நாடு சுற்றுசூழல் மாநில தலைவா் ஜி.முனுசாமி, சங்க நிா்வாகிகள் மதி, ராவத்தநல்லூா் தனசேகரன், தங்க பெருதமிழமுதன், யுவராஜ், கருணாநிதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.