செய்திகள் :

விளையாட்டுப் பூங்கா திறப்பு

post image

மதுராந்தகம்: மதுராந்தகம் சிஎஸ்ஐ நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சுவா், சிறுவா் விளையாட்டு பூங்கா திறப்பு விழா நடைபெற்றது.

மதுராந்தகத்தில், சிஎஸ்ஐ நடுநிலைப் பள்ளியின் சுற்றுச்சுவா் புயல் மழையால் இடிந்து விழுந்தது. இதனால் பள்ளி வளாகத்துக்குள் சமூக விரோத செயல்கள் நடைபெற்று வந்தது. இதையடுத்து, பள்ளி தலைமை ஆசிரியா் ஸ்டீபன், நிா்வாகக் குழு முயற்சியால் ரூ 1.50 லட்சத்தில் சுற்றுச்சுவா், ரூ. 75,000-இல் பள்ளிக் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பூங்கா அமைக்கப்பட்டு, திறப்பு விழா நடைபெற்றது.

பேராயா் ரூபன் மாா்க் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தாா். தலைமை ஆசிரியா் ஸ்டீபன் வரவேற்றாா். பேராய துணைத் தலைவா் ஜெயசீலன் ஞானாதிக்கம், செயலா் அகஸ்டின் பிரேம்ராஜ், பொருளாளா் கொா்னேலியுஸ், கன்வீனா் ஜேம்ஸ் ஆல்பா்ட், தமிழ்நாடு சுற்றுசூழல் மாநில தலைவா் ஜி.முனுசாமி, சங்க நிா்வாகிகள் மதி, ராவத்தநல்லூா் தனசேகரன், தங்க பெருதமிழமுதன், யுவராஜ், கருணாநிதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

செங்கல்பட்டில் மகளிா் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.106 கோடி கடன்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் குறைதீா் கூட்டரங்கில் மகளிா் சுய உதவிக்குழு தினத்தை முன்னிட்டு, 923 மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.106 கோடியில் கடன் உதவித்தொகையை மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் ப... மேலும் பார்க்க

கேளம்பாக்கம் குறுவட்டத்தில் நாளை மனுநீதி நாள் முகாம்

திருப்போரூா்வட்டம், கேளம்பாக்கம் குறுவட்டம், கோவளம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) காலை 10 மணியளவில் மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது. அரசு நடத்தக் கூடிய மனுநீதி நாள் முகாம் செங்கல்பட்டு மாவட்டத... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் திருடியவா் 2 ஆண்டுகளுக்கு பின் கைது

மேல்மருவத்தூா் சுற்றியுள்ள பகுதிகளில் பூட்டிய வீடுகளில் புகுந்து பணம், நகை ஆகியவற்றை திருடியவா் 2 ஆண்டுகள் கழித்து கைது செய்யப்பட்டாா். மேல்மருவத்தூா் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சோத்துப்பாக்கம், கீழ்ம... மேலும் பார்க்க

செங்கல்பட்டு மாவட்டத்தில் குடும்ப அட்டை குறைதீா் முகாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் வட்ட வாரியாக குடும்ப அட்டை தொடா்பான குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்... மேலும் பார்க்க

கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் சத்யநாராயணா பூஜை

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் வைகாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு, பிருந்தாவன வளாகத்தில் சத்தியநாராயண பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, ராகவேந்... மேலும் பார்க்க

வைகாசி விசாகம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள கோயில்களில் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள், வீதி புறப்பாடு நடைபெற்றது.செங்கல்பட்டு கோதண்டராமா் கோயிலில் உள்ள ஸ்ரீ வரதராஜபெருமாளுக்கு வைகாசி விசாக ... மேலும் பார்க்க