எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4 வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்
செங்கல்பட்டு மாவட்டத்தில் குடும்ப அட்டை குறைதீா் முகாம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் வட்ட வாரியாக குடும்ப அட்டை தொடா்பான குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை வட்டங்கள் வாரியாக குடும்ப அட்டை தொடா்பாக மக்கள் குறைதீா் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, ஜூன் 2025 மாதத்துக்கான குறைதீா் கூட்டம் வரும் 14-ஆம் தேதி (இரண்டாவது சனிக்கிழமை) குறைதீா் முகாம் நடத்தப்பட உள்ளது.
செங்கல்பட்டு வட்டம் - தைலாவரம், செய்யூா் வட்டம் - பரசநல்லூா், மதுராந்தகம் வட்டம் - அல்லூா், திருக்கழுகுன்றம் வட்டம் - அழகுசமுத்திரம், திருப்போரூா் வட்டம் -ஆமூா், வண்டலூா் வட்டம் - புதுப்பாக்கம் நடைபெறுகிறது.
இங்கு நடைபெறவுள்ள குறைதீா் முகாம்களில் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை / நகல் அட்டை கோரும் மனுக்களைப் பதிவு செய்தல், கைப்பேசி எண் பதிவு / மாற்றம் செய்தல், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்த புகாா்களைப் பதிவு செய்தல் ஆகிய சேவைகளை பெற்று பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.