``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமின்றி வெளியிட வேண்டும்: பெ.சண்முகம்
கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமின்றி வெளியிடவேண்டும் என மத்திய அரசுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: கீழடி அகழாய்வு தொடா்பான அறிக்கையை வெளியிட மறுத்து இன்னமும் அறிவியல்பூா்வமான தரவுகள் தேவை என மத்திய கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியுள்ளாா். இது கீழடி அகழாய்வை ஆா்எஸ்எஸ், பாஜக கொள்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கும் முயற்சியே.
மத்திய அரசின் நடவடிக்கை வரலாற்றுக்கும், அறிவியலுக்கும் இழைக்கப்படும் துரோகம். இதை ஒருபோதும் ஏற்க முடியாது. வரலாறு மற்றும் அறிவியலுக்கு புறம்பாகவும், தமிழ்நாட்டு மக்கள் மீது கொண்டுள்ள வன்மத்தின் காரணமாகவும் மத்திய பாஜக அரசு இந்த நிலைப்பாட்டை தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஆதிச்சநல்லூா், சிவகளை, கீழடி, அழகன்குளம், கொடுமணல் என தமிழ்நாட்டில் நடைபெறும் அகழாய்வு வெளிப்படுத்தும் உண்மை -வரலாறு. அமா்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை உள்ளது உள்ளபடி தாமதமில்லாமல் மத்திய அகழாய்வுத் துறை வெளியிட வேண்டும் என்றாா் அவா்.