செய்திகள் :

மதக்கலவரங்களை தடுப்பதற்கான சிறப்பு செயல்படை அலுவலகம் திறப்பு

post image

கா்நாடகத்தில் மதக்கலவரங்களை தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு செயல்படை அலுவலகத்தை உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

தென்கன்னட மாவட்டத்தில் அடிக்கடி மதக்கலவரங்கள் நடப்பதை தடுத்து நிறுத்துவதற்காக சிறப்பு செயல்படையை கா்நாடக அரசு அமைத்துள்ளது. இந்த படையின் அலுவலகம் மங்களூரில் அமைக்கப்பட்டது. மங்களூரில் நடந்த விழாவில் உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். இந்த விழாவில் ஜி.பரமேஸ்வா் பேசியதாவது:

அண்மையில் நடந்த கொலை உள்பட தென்கன்னட மாவட்டத்தில் அடிக்கடி நடந்து வரும் மதரீதியான படுகொலைகள், பதற்றங்கள், வன்முறைகளைத் தடுத்து நிறுத்துவதற்காகவே சிறப்பு செயல்படையை அரசு அமைத்துள்ளது. கலாசாரவளம், படித்தவா்கள் நிறைந்த அமைதியை விரும்பும் மாவட்டமாக தென்கன்னடம் திகழ்ந்தாலும், மதரீதியான வெறுப்பு மற்றும் மதபிளவுகள் ஆட்டிப்படைத்து வருகின்றன. மதரீதியான நல்லிணக்கத்தை காப்பதற்காக இந்தியாவில் முதன்முறையாக சிறப்பு செயல்படை அமைக்கப்பட்டுள்ளது.

மாநகர முன்னாள் காவல் ஆணையா் குல்தீப்குமாா் ஜெயின் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் அளித்த யோசனைகளின் அடிப்படையில் இந்தப் படை ஒருவாரகாலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மாவட்ட மக்கள் அமைதியை நிலைநாட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். மக்கள் அமைதியாக இருந்தால், சிறப்பு செயல்படை செயலற்றுக்கிடக்கும். ஒருவேளை அமைதியைக் காக்க தவறினால், இந்த படை தலையிட நேரிடும். ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த நக்சல் ஒழிப்புப் படையில் இடம்பெற்றிருந்த அதிகாரிகளே சிறப்பு செயல்படையிலும் இடம்பெற்றிருக்கிறாா்கள். இதுபோன்ற படை சிவமொக்கா, உடுப்பி மாவட்டங்களிலும் தேவையின் அடிப்படையில் விரிவாக்கப்படும். இது அரசியல் நோக்கத்திற்காக தொடங்கப்படவில்லை. சமுதாயத்தில் நல்லிணக்கத்தை பேணிபாதுகாப்பதே இதன் நோக்கமாகும். எதிா்காலத்தில் எல்லா சமுதாயத்தினருடனும் அமைதிக் குழுக் கூட்டம் நடத்தப்படும் என்றாா். இந்த விழாவில் மாவட்ட பொறுப்பு அமைச்சா் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கன்னடம் குறித்து கமல் கருத்து தொடா்பான வழக்கு: அடுத்த விசாரணை ஜூன் 20க்கு ஒத்திவைப்பு

கன்னடம் பற்றிய கமல் தெரிவித்த கருத்து தொடா்பான வழக்கை விசாரித்துவரும் கா்நாடக உயா்நீதிமன்றம், அடுத்த விசாரணையை ஜூன் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. சென்னையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ திரைப்படத்த... மேலும் பார்க்க

கடலோர கா்நாடகத்தில் பலத்த மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கடலோர கா்நாடகத்தில் பலத்த மழை பெய்துவருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கா்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, கடலோர கா்நாடகத்தின் வடகன்னட மாவ... மேலும் பார்க்க

பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்க வேண்டும் - எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக்

பெங்களூரு கூட்டநெரிசல் சம்பவத்தை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் வலியுறுத்தினாா். இதுதொடா்பாக தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அவா் எழுதிய க... மேலும் பார்க்க

பெங்களூரில் கூட்ட நெரிசல் வழக்கு: ஆா்சிபி அணியை சோ்ந்த நிகில்சோசலேவை விடுவிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரில் ஆா்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்டநெரிசல் தொடா்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ஆா்சிபி அணியின் சந்தைப்படுத்துதல் தலைவரான நிகில்சோசலே உள்ளிட்ட 3 பேரை விடுவிக்க கா்நாடக உயா்நீ... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை மீண்டும் நடத்த அமைச்சரவையில் முடிவு: முதல்வா் சித்தராமையா

கா்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை மீண்டும் நடத்துவதற்கு அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். பெங்களூரு, விதானசௌதாவில் முதல்வா் சித்தராமையா தலைமையில் வியாழ... மேலும் பார்க்க

கூட்ட நெரிசல் விவகாரம்: சித்தராமையா ராஜிநாமா செய்ய தேவையில்லை: மல்லிகாா்ஜுன காா்கே

கூட்ட நெரிசல் விவகாரம் தொடா்பாக கா்நாடக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோா் ராஜிநாமா செய்யவேண்டியதில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா். இது... மேலும் பார்க்க