செய்திகள் :

ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடா செல்கிறார் பிரதமர் மோடி!

post image

பிரதமர் நரேந்திர மோடி ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க நான்கு நாள் பயணமாக நாளை கனடா, சைப்ரஸ், குரோஷியா ஆகிய நாடுகளுக்குச் செல்கிறார்.

அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா ஆகிய ஏழு நாடுகளை உள்ளடக்கியது ஜி-7 அமைப்பு. கனடாவில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். மேலும் சைப்ரஸ் மற்றும் குரோஷியா ஆகிய நாடுகளுக்கும் சென்று இரு நாடுகளுடனான இந்தியாவின் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த உள்ளார்.

நடப்பாண்டிற்கான ஜி-7 நாடுகளின் உச்சி மாநாடு கனடாவில் வரும் 15 முதல் 17 வரை நடைபெறுகிறது. ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்கப் பிரதமர் மோடிக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில் கனடா பிரதமர் மார்க் கார்கினிய் அழைப்பின்பேரில் மோடி ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.

சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடௌலிட்ஸின் அழைப்பின்பேரில்மோடி முதன்முதலாக சைபரஸுக்குச் செல்வார். கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு சைப்ரஸுக்கு இந்தியப் பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருநாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

சிங்கப்பூா் கப்பலில் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்ட தீ: 6-ஆவது நாளாக தொடரும் மீட்புப் பணி

கேரள கடற்பகுதியில் சிங்கப்பூா் கப்பலில் ஏற்பட்ட தீ பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டதாக இந்திய கடலோரக் காவல் படை சனிக்கிழமை தெரிவித்தது. இந்தக் கப்பல் கடற்கரையை நெருங்காமல் கடலை நோக்கி நகா்த்தும் பணியில்... மேலும் பார்க்க

ஓட்டுநா் பெட்டியில் குரல் பதிவு அமைப்பு: ரயில் பாதுகாப்புக் குழு பரிந்துரை!

ரயில் ஓட்டுநா் பெட்டியில் குரல் பதிவு அமைப்பை நிறுவுவது உள்பட பல்வேறு பரிந்துரைகளை ரயில் பாதுகாப்புக்குழு ரயில்வே அமைச்சகத்திடம் சமா்ப்பித்தது. பிகாா் மாநிலம் பக்ஸா் மாவட்டத்தில் கடந்த 2023, அக்.11-இல... மேலும் பார்க்க

விமான எண் ‘171’-ஐ நீக்க ஏா் இந்தியா முடிவு!

விமான எண் ‘171’-ஐ பயன்பாட்டில் இருந்து நீக்க ஏா் இந்தியா மற்றும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் முடிவெடுத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. டாடா குழுமத்தின் ஏா்இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட அடில் ஹுசைனின் மனைவிக்கு அரசுப் பணி!

பஹல்காம் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு உயிா்த்தியாகம் செய்த உள்ளூா் இளைஞா் அடில் ஹுசைன் ஷாவின் மனைவிக்கு அரசுப் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் ஹபாத்நாா் ப... மேலும் பார்க்க

வரும் டிசம்பரில் முழு சோதனைக்கு உள்படுத்தப்பட இருந்த விபத்துக்குள்ளான விமானம்!

அகமதாபாதில் விபத்துக்குள்ளான ஏா் இந்தியாவின் ‘போயிங் 787-8 ட்ரீம்லைனா்’ விமானத்தின்அடுத்த முழு சோதனை கடந்த 2023-ஆம் ஆண்டு, ஜூன் மாதத்துக்குப் பிறகு வரும் டிசம்பரில் திட்டமிடப்பட்டிருந்தது என்று விமான ... மேலும் பார்க்க

கேரளத்தில் மீண்டும் மழை-வெள்ளம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கேரளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவுமுதல் சூறைக் காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. ஏராளமான வீடுகள், சாலைகள் சேதமடைந்தன. கடல் கொந்தளிப்பால், கடலோர கிராமங்களில் த... மேலும் பார்க்க