ஈரான் மீதான இஸ்ரேஸ் தாக்குதல்: டிரம்ப்புக்கு பின்னடைவா? பெரு வெற்றியா?
ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடா செல்கிறார் பிரதமர் மோடி!
பிரதமர் நரேந்திர மோடி ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க நான்கு நாள் பயணமாக நாளை கனடா, சைப்ரஸ், குரோஷியா ஆகிய நாடுகளுக்குச் செல்கிறார்.
அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா ஆகிய ஏழு நாடுகளை உள்ளடக்கியது ஜி-7 அமைப்பு. கனடாவில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். மேலும் சைப்ரஸ் மற்றும் குரோஷியா ஆகிய நாடுகளுக்கும் சென்று இரு நாடுகளுடனான இந்தியாவின் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த உள்ளார்.
நடப்பாண்டிற்கான ஜி-7 நாடுகளின் உச்சி மாநாடு கனடாவில் வரும் 15 முதல் 17 வரை நடைபெறுகிறது. ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்கப் பிரதமர் மோடிக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில் கனடா பிரதமர் மார்க் கார்கினிய் அழைப்பின்பேரில் மோடி ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.
சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடௌலிட்ஸின் அழைப்பின்பேரில்மோடி முதன்முதலாக சைபரஸுக்குச் செல்வார். கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு சைப்ரஸுக்கு இந்தியப் பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருநாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.