செய்திகள் :

வரும் டிசம்பரில் முழு சோதனைக்கு உள்படுத்தப்பட இருந்த விபத்துக்குள்ளான விமானம்!

post image

அகமதாபாதில் விபத்துக்குள்ளான ஏா் இந்தியாவின் ‘போயிங் 787-8 ட்ரீம்லைனா்’ விமானத்தின்அடுத்த முழு சோதனை கடந்த 2023-ஆம் ஆண்டு, ஜூன் மாதத்துக்குப் பிறகு வரும் டிசம்பரில் திட்டமிடப்பட்டிருந்தது என்று விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

அகமதாபாதிலிருந்து ஏா் இந்தியா நிறுவனத்தின் ‘ஏஐ 171’ விமானம் 242 பேருடன் லண்டன் நோக்கி புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்திலிருந்த 241 பேரும் தரையிலிருந்த 20-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவா்கள் உள்பட பொதுமக்களும் உயிரிழந்தனா்.

2 என்ஜின்களின் திடீா் செயலிழப்புக் காரணமாக உந்துவிசையை இழந்து, மேலே பறக்க இயலாமல் விமானம் தரையில் விழுந்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், அதிகாரபூா்வ விசாரணையின் முடிவில் உண்மை காரணம் வெளிவரும்.

இந்நிலையில், விபத்துக்குள்ளான ஏா் இந்தியா விமானத்தின் சோதனை தரவுகள் குறித்து அந்த நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த 2023-ஆம் ஆண்டு, ஜூனில் விமானத்தின் கடைசி முழு பரிசோதனை நடைபெற்றது. வரும் டிசம்பரில் அடுத்த சோதனை திட்டமிடப்பட்டிருந்தது. 12 ஆண்டுகள் பழைமையான விமானத்தின் வலது என்ஜின் கடந்த மாா்ச்சில் முழுமையாக பழுதுபாா்க்கப்பட்டு, மீண்டும் பொருத்தப்பட்டது. இடது என்ஜின் கடந்த ஏப்ரலில் சோதிக்கப்பட்டது.

‘ஜிஇ ஏரோஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஜிஇஎன்எக்ஸ்’ என்ஜின்கள் விமானத்தில் பொருத்தப்பட்டிருந்தன. என்ஜின்களில் கோளாறு இருக்க வாய்ப்பில்லை’ என்றாா்.

அகமதாபாத் விபத்தைத் தொடா்ந்து இந்திய விமானத் துறையில் செயல்பாட்டில் உள்ள போயிங் 787-8 மற்றும் 787-9 விமானங்களை உடனடியாக பாதுகாப்புச் சோதனைக்குள் உள்படுத்த விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.

ஏா் இந்தியா சேவையில் 26 போயிங் 787-8 விமானங்களும், 7 போயிங் 787-9 உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. டிஜிசிஏ எடுக்கும் பாதுகாப்புக்கு நடவடிக்கைகளுக்கு அனைத்து ஆதரவையும் வழங்குவோம் என்று ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமைதியாக இருப்பதே புத்திசாலித்தனம்! பாஜகவினருக்கு மத்திய அமைச்சர்கள் அறிவுரை!

சில சமயங்களில் அமைதியாக இருக்க வேண்டும் என்று பாஜகவினருக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவுரை வழங்கினார்.விஜய் ஷாவின் பேச்சு சர்ச்சையான நிலையில், கட்சியினர் பேசும்போது கவனமுடன் பேச வேண்டும் என்று மத்தி... மேலும் பார்க்க

உ.பி.: மின்னல் பாய்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் மின்னல் பாய்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், சன்வர்ஷா ஹல்லபோர் கிராமத்தில் மின்னல் பாய்ந்து ஒரே குடும்பத்தைச... மேலும் பார்க்க

திருவனந்தபுரத்தில் பிரிட்டிஷ் போர் விமானம் அவசர தரையிறக்கம்

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பிரிட்டிஷ் போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. எரிபொருள் குறைவாக இருந்ததால் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பிரிட்டிஷ் எப்-35 போர் விமானம் சனிக்கி... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! 12 பேரின் உடல்கள் ஒப்படைப்பு! மருத்துவப் பணியில் 600 பேர்!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் உடல்களை ஒப்படைக்கும் பணி இன்றுமுதல் தொடங்கப்படுகிறது.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் 270-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். விமானம் தீப்பற்றி எரி... மேலும் பார்க்க

தில்லியில் 100 அடி உயர மொபைல் கோபுரம் இடிந்து விழுந்தது: யாருக்கும் காயம் இல்லை

தில்லியில் 100 அடி உயர மொபைல் கோபுரம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தெற்கு தில்லியின் சஃப்தர்ஜங் என்க்ளேவில் 100 அடி உயர மொபைல் கோபுரம் பலத்த காற்று மற்றும் மழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை அதிகா... மேலும் பார்க்க

உ.பி.யில் பிக்-அப் வாகனத்துடன் உடலைக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் மோதல்: 5 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் பிக்-அப் வாகனத்துடன் ஆம்புலன்ஸ் மோதியதில் 5 பேர் பலியானார்கள். உத்தரப் பிரதேச மாநிலம், அமேதி மாவட்டத்தில் உள்ள பூர்வாஞ்சல் விரைவுச்சாலையில் பிக்-அப் வாகனத்துடன் ஆம்புலன்ஸ் ஞாயிற்ற... மேலும் பார்க்க