உ.பி.: மின்னல் பாய்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
உத்தரப் பிரதேசத்தில் மின்னல் பாய்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், சன்வர்ஷா ஹல்லபோர் கிராமத்தில் மின்னல் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியானதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த சனிக்கிழமை இரவு குடும்பத்தினர் தங்கள் கூரை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர் என்று அதிகாரி வினிதா சிங் கூறினார்.
திருவனந்தபுரத்தில் பிரிட்டிஷ் போர் விமானம் அவசர தரையிறக்கம்
பலியானவர்கள் வீரேந்திர வன்வசி, அவரது மனைவி பார்வதி மற்றும் மகள்கள் ராதா மற்றும் கரிஷ்மா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பலியானவர்களின் வயது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றும் உடல்கள் உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மின்னல் பாய்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.