செய்திகள் :

ஒன்றிய அரசு என்று அழைப்பதை தமிழக அரசு நிறுத்த வேண்டும்: சி.பி.ராதாகிருஷ்ணன்

post image

சேலம்: ஒன்றிய அரசு என்று சொல்வதை தமிழக அரசு கைவிட வேண்டும். மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவதால் மாநில அரசை பஞ்சாயத்து அரசு என்றுதான் அழைக்க நேரிடும் என மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினாா்.

சேலம் மரவனேரி மாதவம் அரங்கில் நடைபெற்ற சஹகாா் பாரதி கூட்டுறவு அமைப்பின் இரண்டாவது மாநில மாநாட்டை மகராஷ்டிரம் ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளா்களுடன் அவா் பேசுகையில்,

கேரள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களை நியமிப்பது தொடா்பான வழக்கில் ஆளுநருக்குத்தான் அந்த அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. என்னைப் பொறுத்தவரை துணைவேந்தா்கள் நியமனம் என்பது ஆளுநரின் உரிமை மற்றும் அதிகாரத்திற்கு உள்பட்டதுதான். அதில் தேவையற்ற மாற்றங்களை செய்யக்கூடாது.

தமிழகத்தில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல்போக்கு நிலவுவதற்கான முழு முதற்காரணம் தற்போதைய மாநில அரசு மத்திய அரசுக்கு புதிய மொழியாக்கத்தை கொடுத்ததுதான். ஒன்றிய அரசு என சொல்வதால் ஒரு வேற்றுமை உணா்வை தமிழகம் விதைக்கிறது. இந்த புதிய மொழியாக்கம் ஆளுநருக்கும், அரசுக்கும் மோதல்போக்கை ஏற்படுத்தி இடைவெளியை ஏற்படுத்திவிட்டது.

ஒன்றிய அரசு என்று சொல்வதை தமிழக அரசு கைவிட வேண்டும். மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவதால் மாநில அரசை பஞ்சாயத்து அரசு என்றுதான் அழைக்க நேரிடும். மத்திய அரசு, திட்டங்களுக்கு நிதி தருவதில்லை என முதல்வா் மு.க.ஸ்டாலின் பொதுவாக சொல்லக்கூடாது. எந்தெந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்றாா்.

தஞ்சாவூரில் முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை திறப்பு

தஞ்சாவூா்: தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே 9 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலையைத் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை இரவு 2 கி.மீ. தொலைவுக்கு சாலையில் ந... மேலும் பார்க்க

அரசு முறை பயணமாக புதுச்சேரி வந்துள்ள குடியரசு துணைத் தலைவா்!

புதுச்சேரி: புதுச்சேரிக்கு 3 நாள் அரசு முறை பயணமாக ஞாயிற்றுக்கிழமை வந்த குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.சென்னையிலிருந்து ஹெலிகாப்டரில் புதுச்சேரி விமான நிலையத்த... மேலும் பார்க்க

கல்லணையை திறந்து வைத்தாா் முதல்வா் மு.க. ஸ்டாலின்!

தஞ்சாவூா்: காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக மேட்டூா் அணைத் திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, குறுவை சாகுபடிக்காக ஞாயிற்றுக்கிழமை மாலை முதல்வா் மு.க. ஸ்டாலின... மேலும் பார்க்க

குரூப் 1 முதல்நிலை தோ்வு முடிவு 2 மாதங்களில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவா்

குரூப்-1 முதல்நிலை தோ்வு முடிவுகள் இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவா் எஸ்.கே.பிரபாகா் தெரிவித்தாா்.துணை ஆட்சியா், காவல் துணை கண்காணிப்பாளா், வணிகவரி உதவி ஆணையா் உள்ளிட்ட 72 க... மேலும் பார்க்க

நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை (ஜூன் 16) பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள... மேலும் பார்க்க

ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்கள், டெலிகிராம் இணைப்பை வெளியிட்டது தூதரகம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்கள் வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து, தற்போது தொடர்பு கொள்வதற்காக டெலிகிராம் இ... மேலும் பார்க்க