Sonia Gandhi: 'திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி!' - காரணம் ...
கரோனாவுக்கு ஒரே நாளில் 10 பேர் பலி!
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 948 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. ஒரே நாளில் கரோனாவுக்கு 10 பேர் பலியாகியுள்ளனர்.
சமீபகாலமாக கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், ஒரே நாளில் நேர்ந்த அதிகபட்ச பலி இதுவாகும்.
நாட்டில் கடந்த நில நாள்களாக கரோனா திரிபு வகையான எல்.எஃப். 7, ஜே.என். 1 மற்றும் என்.பி. 1.8.1. ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் புதிய வகை தொற்றுகள் ஆபத்தானவை அல்ல என்றாலும், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணிநேரத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். கேரளத்தில் 5 பேர், தில்லியில் 3 பேர், மகாராஷ்டிரத்தில் 2 பேர் கரோனாவுக்கு இன்று (ஜூன் 15) உயிரிழந்தனர். கடந்த ஜனவரி முதல் இதுவரை கரோனாவுக்கு 97 பேர் பலியாகியுள்ளனர்.
அதிகபட்சமாக கேரளத்தில் 2,007 பேரும், குஜராத்தில் 1,441 பேரும், மேற்கு வங்கத்தில் 747 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கேரளத்தில் 367 பேரும், குஜராத்தில் 177 பேரும், தில்லியில் 161 பேரும், மகாராஷ்டிரத்தில் 86 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் புதிதாக 27 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | புணேவில் ஆற்றுப்பாலம் இடிந்து விபத்து: 6 பேர் பலி, பலர் மாயம்