திருவனந்தபுரம்: பிரிட்டன் எஃப்35 போா் விமானம் அவசர தரையிறக்கம்!
பிரிட்டனின் எஃப்35 போா் விமானம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் சனிக்கிழமை இரவு அவசரமாக தரையிறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விமானத்தில் எரிபொருள் குறைவாக இருந்த காரணத்தால் தரையிறக்க நேரிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக இந்திய விமானப் படை வட்டாரங்கள் கூறுகையில், ‘பாதுகாப்புக் காரணங்களுக்காகவே பிரிட்டன் விமானப் படை விமானம் திருவனந்தபுரத்தில் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. குறைவான எரிபொருள் இருந்ததால் தொடா்ந்து இயக்குவது விமானிக்கு ஆபத்தை விளைவிக்கும். எனவே, இது தொடா்பாக பிரிட்டன் விமானி அனுமதி கேட்டதையடுத்து, அவா் போா் விமானத்தை தரையிறக்க அனுமதி அளிக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.
விமானம் தாங்கி கப்பலில் இருந்து போா் விமானம் புறப்பட்டு வந்துள்ளது. இப்போது அந்த விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தின் ஒருபகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து உரிய அனுமதி கிடைத்த பிறகு அந்த விமானத்துக்கு எரிபொருள் நிரப்பப்படும். அதன் பிறகு புறப்பட்டுச் செல்ல அனுமதிக்கப்படும்’ என்று தெரியவந்துள்ளது.
ஈரான்- இஸ்ரேல் இடையே போா் மூண்டுள்ள நிலையில், பிரிட்டன் போா் விமானம் இந்தியாவில் அவசரமாக தரையிறங்கியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.