செய்திகள் :

விமான விபத்து: ஒரே சவப்பையில் 2 தலைகளுடன் ஒரு உடல்! தடயவியல் குழுவினருக்கு சிக்கல்!!

post image

ஒரு டிஎன்ஏ பரிசோதனையை செய்து முடித்து உடலை அடையாளம் காண்பதற்கு குறைந்தது 72 மணி நேரம் ஆகும் என்ற நிலையில், ஒரே சவப்பையில் இரண்டு தலைகளுடன் ஒரு உடல் வைக்கப்பட்டிருந்ததால், தடய அறிவியல் குழுவினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இரண்டு பேரின் உடல் பாகங்கள் ஒரே பையில் வைக்கப்பட்டிருப்பதால், டிஎன்ஏ சோதனையை மீண்டும் தனித்தனியாக இருக்கும் உடல் பாகங்களுக்கு மேற்கொண்டு, அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கும் சிக்கலான நிலை ஏற்பட்டுள்ளது என்று தடய அறிவியல் குழுவினர் கூறியுள்ளனர்.

இதுவரை ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களில் டிஎன்ஏ சோதனையின் மூலம் 32 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, 14 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக பிடிஐ செய்தி தெரிவிக்கிறது.

மீதமுள்ள உடல்கள் மற்றும் உடல்பாகங்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உறவினர்களை இழந்தவர்கள், தங்கள் அன்புக்குரியவர்களின் முழுமையான உடல்களை அதிகாரிகள் அளிப்பார்கள் என்று காத்திருந்தனர்.

சிலரோ, தங்களது உறவினர்களின் முழுமையான உடல் பாகங்களை அளிக்குமாறு அதிகாரிகளிடம் ஞாயிற்றுக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவரை சமாதானப்படுத்துவது என்பது இயலாததாகிவிட்டது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், மிகவும் கருகிய நிலையில் இருக்கும் உடல் பாகங்கள் அனைத்தையும் மிகச் சரியாக எடுத்து முழுமையாக உடல் பாகங்களை ஒப்படைப்பது என்பது இந்த விபத்தில் இயலாதது என்கிறார்கள்.

அதாவது, உடல்பாகங்கள் வைக்கப்பட்டிருக்கும் பைகளில் டிஎன்ஏ பொருந்தாத பாகங்களை அப்படியே வைத்துவிட்டு, அதனை குளிர்பதன கிடங்குக்கு மாற்றிவிடுகிறோம். முழுமையான தடயவியல் பகுப்பாய்வு நடத்தப்பட்டு, இறுதியில் அடையாளம் காணப்பட்ட உடல் பாகங்களை மட்டும் சவப்பெட்டிகளில் வைத்து குடும்பங்களிடம் ஒப்படைப்பது தான், நிலையான மருத்துவ நெறிமுறை. அதனை தற்போது பின்பற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இது போருக்கான சகாப்தம் அல்ல: மோடி

இது போருக்கான சகாப்தம் அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்கு பிரதமா் ... மேலும் பார்க்க

கேரளத்தில் கொட்டித்தீர்க்கும் பருவமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கேரளத்தில் திங்கள்கிழமையும் இடைவிடாத பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்பட மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொ... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது!

பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது திங்கள்கிழமை வழங்கப்பட்டது.மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்க... மேலும் பார்க்க

கைலாஷ் மானசரோவர் யாத்திரை: சிக்கிம் வந்தடைந்த முதல் குழு!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கான 36 பக்தர்கள் கொண்ட முதல் குழு, சிக்கிமின் தலைநகர் கேங்க்டாக்கிற்கு வந்தடைந்தது. இந்தியா-சீன ராணுவத்தினர் இடையே கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுக... மேலும் பார்க்க

உ.பி.யில் முத்தமிட்டு விளையாடிய நபரின் நாக்கை கடித்த பாம்பு !

உத்தரப் பிரதேசத்தில் பாம்புக்கு முத்தமிட்டு விளையாடிய நபரை அந்த பாம்பு கடித்ததில் அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். உத்தரப் பிரதேச மாநிலம், அம்ரோஹாவைச் சேர்ந்த விவசாயி ஜிதேந்திர குமார்.... மேலும் பார்க்க

விமான விபத்தில் சிக்கினாரா இயக்குநர்? வலுசேர்க்கும் ஆதாரங்கள்!

அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு காணாமல் போன இசை ஆல்பங்களை இயக்கும் மகேஷ் ஜிராவாலா என்பவர் மனைவியின் டிஎன்ஏ மாதிரிகள் பெறப்பட்டுள்ளது.அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடந்த ... மேலும் பார்க்க