செய்திகள் :

விமான விபத்தில் சிக்கினாரா இயக்குநர்? வலுசேர்க்கும் ஆதாரங்கள்!

post image

அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு காணாமல் போன இசை ஆல்பங்களை இயக்கும் மகேஷ் ஜிராவாலா என்பவர் மனைவியின் டிஎன்ஏ மாதிரிகள் பெறப்பட்டுள்ளது.

அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடந்த வாரம் விபத்தில் சிக்கியது. இதில், பயணித்த 242 பேரில் ஒருவர் மட்டுமே உயிர்பிழந்த்துள்ளார்.

இதனிடையே, விமானம் மோதிய மருத்துவக் கல்லூரி மற்றும் விழுந்து நொறுங்கிய குடியிருப்புப் பகுதியிலும் சிலர் உயிரிழந்துள்ளனர்.

மொத்தம் 270 சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், 272 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது.

இயக்குநர் சிக்கினாரா?

நரோடாவில் வசிக்கும் மகேஷ் கலாவாடியா என்கிற மகேஷ் ஜிராவாலா, இசை ஆல்பங்களை இயக்கி வருபவர்.

அவர் விபத்து நடைபெற்ற அன்று பிற்பகலில், லா கார்டன் பகுதியில் ஒருவரை சந்திக்கப் போவதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.

இதுதொடர்பாக காவல்துறையில் மகேஷின் மனைவி புகார் அளித்துள்ளர்.

வலுசேர்க்கும் ஆதாரங்கள்

காணாமல் போன மகேஷ், விபத்து அன்று பிற்பகல் 1.14 மணிக்கு அவரது மனைவிக்கு போன் செய்து, சிறிது நேரத்தில் வீடு திரும்பப் போவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், அவர் வீடு திரும்பாததாலும் மீண்டும் போன் செய்தபோது அணைக்கப்பட்டிருந்ததாலும் காவல்துறையில் புகார் அளித்ததாக அவரது மனைவி ஹெடல் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் மகேஷின் செல்போனை டிராக் செய்தபோது, கடைசியாக அவரின் செல்போன், விபத்து பகுதியில் இருந்து சரியாக 700 மீட்டர் தொலைவில் அணைக்கப்பட்டுள்ளது.

மேலும், பகல் 1.39 மணிக்கு விபத்து ஏற்பட்ட நிலையில், மகேஷின் செல்போன் 1.40 மணிக்கு அணைக்கப்பட்டிருக்கிறது. அவரது ஸ்கூட்டரும் செல்போனும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த நிலையில், மகேஷின் மனைவி ஹெடலின் டிஎன்ஏ மாதிரியையும் காவல்துறையினர் பெற்றுள்ளனர். அடையாளம் தெரியாத நிலையில் உள்ள சடலங்களில் மகேஷின் உடல் இருக்கின்றதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதுவரை 87 சடலங்கள் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு, 47 சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : விபத்து கற்றுத்தந்த பாடம்! அவசர அழைப்புக்கு தங்கள் செல்போன் எண்ணை கொடுத்திருந்த பயணிகள்!

விமான விபத்து: விஜய் ரூபானியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் 119 உடல்கள் அடையாளம் காணப்பட்டன

அகமதாபாத்/ ராஜ்கோட்: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வா் விஜய் ரூபானியின் உடல் ராஜ்கோட்டில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட அவரது உடலுக்க... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: எஃப்ஏடிஎஃப் கண்டனம்

புது தில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பயங்கரவாத நிதித் தடுப்புக்கான சா்வதேச கண்காணிப்புக் குழு (எஃப்ஏடிஎஃப்), நிதியுதவி இல்லாமல் இதுபோன்ற தாக்குதல் நடைபெறாது என்று குறிப்பிட்... மேலும் பார்க்க

விரைவில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா: பிரதமா் மோடி நம்பிக்கை

நிகோசியா: ‘உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா உருவெடுக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா். மூன்று நாடுகள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள... மேலும் பார்க்க

குவாண்டம் தொழில்நுட்ப அடிப்படையில் தகவல் தொடா்பு: டிஆா்டிஓ வெற்றிகரமாக சோதனை

புது தில்லி: குவாண்டம் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பான தகவல் தொடா்பு சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ), தில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன... மேலும் பார்க்க

மேற்கு ஆசிய சூழல்: யுஏஇ, அா்மேனியா வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் பேச்சு

புது தில்லி: இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் மேற்கு ஆசிய சூழல் குறித்து ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), அா்மேனியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சா்... மேலும் பார்க்க

ஈரானிலிருந்து இந்தியா்கள் வெளியேற்றம் தொடக்கம்

புது தில்லி: ஈரானில் இஸ்ரேலின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டில் உள்ள இந்திய மாணவா்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கையை இந்தியா திங்கள்கிழமை தொடங்கியது. முதல் கட்டமாக 110 மாணவா்கள் ... மேலும் பார்க்க