செய்திகள் :

விமான விபத்தில் சிக்கினாரா இயக்குநர்? வலுசேர்க்கும் ஆதாரங்கள்!

post image

அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு காணாமல் போன இசை ஆல்பங்களை இயக்கும் மகேஷ் ஜிராவாலா என்பவர் மனைவியின் டிஎன்ஏ மாதிரிகள் பெறப்பட்டுள்ளது.

அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடந்த வாரம் விபத்தில் சிக்கியது. இதில், பயணித்த 242 பேரில் ஒருவர் மட்டுமே உயிர்பிழந்த்துள்ளார்.

இதனிடையே, விமானம் மோதிய மருத்துவக் கல்லூரி மற்றும் விழுந்து நொறுங்கிய குடியிருப்புப் பகுதியிலும் சிலர் உயிரிழந்துள்ளனர்.

மொத்தம் 270 சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், 272 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது.

இயக்குநர் சிக்கினாரா?

நரோடாவில் வசிக்கும் மகேஷ் கலாவாடியா என்கிற மகேஷ் ஜிராவாலா, இசை ஆல்பங்களை இயக்கி வருபவர்.

அவர் விபத்து நடைபெற்ற அன்று பிற்பகலில், லா கார்டன் பகுதியில் ஒருவரை சந்திக்கப் போவதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.

இதுதொடர்பாக காவல்துறையில் மகேஷின் மனைவி புகார் அளித்துள்ளர்.

வலுசேர்க்கும் ஆதாரங்கள்

காணாமல் போன மகேஷ், விபத்து அன்று பிற்பகல் 1.14 மணிக்கு அவரது மனைவிக்கு போன் செய்து, சிறிது நேரத்தில் வீடு திரும்பப் போவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், அவர் வீடு திரும்பாததாலும் மீண்டும் போன் செய்தபோது அணைக்கப்பட்டிருந்ததாலும் காவல்துறையில் புகார் அளித்ததாக அவரது மனைவி ஹெடல் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் மகேஷின் செல்போனை டிராக் செய்தபோது, கடைசியாக அவரின் செல்போன், விபத்து பகுதியில் இருந்து சரியாக 700 மீட்டர் தொலைவில் அணைக்கப்பட்டுள்ளது.

மேலும், பகல் 1.39 மணிக்கு விபத்து ஏற்பட்ட நிலையில், மகேஷின் செல்போன் 1.40 மணிக்கு அணைக்கப்பட்டிருக்கிறது. அவரது ஸ்கூட்டரும் செல்போனும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த நிலையில், மகேஷின் மனைவி ஹெடலின் டிஎன்ஏ மாதிரியையும் காவல்துறையினர் பெற்றுள்ளனர். அடையாளம் தெரியாத நிலையில் உள்ள சடலங்களில் மகேஷின் உடல் இருக்கின்றதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதுவரை 87 சடலங்கள் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு, 47 சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : விபத்து கற்றுத்தந்த பாடம்! அவசர அழைப்புக்கு தங்கள் செல்போன் எண்ணை கொடுத்திருந்த பயணிகள்!

புணே: ஆற்றுப்பாலம் இடிந்ததற்கு மக்களின் அலட்சியமே காரணம்! -பாஜக அமைச்சர்

புணே: புணே மாவட்டத்தில் இந்திராயணி ஆற்றின் மீது கட்டப்பட்ட பழைய இரும்புப்பாலம் ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 15) இடிந்து விழுந்ததில் அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த ஏராளமானோர் ஆற்றில் விழுந்தனர். இந்த கோர வி... மேலும் பார்க்க

சாலையில் பெண்ணை அறைந்த பைக் டாக்ஸி ஓட்டுநர் மீது வழக்கு!

பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸியில் சென்ற பெண்ணை சாலையில் வைத்து அறைந்த ஓட்டுநர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வண்டியை வேகமாக ஓட்டியதால் பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு இறங்கிய ... மேலும் பார்க்க

மே மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 2.8% அதிகரிப்பு! இறக்குமதி 1% குறைவு!

கடந்த மே மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி மதிப்பு 2.8% அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மே மாதத்திற்கான நாட்டின் மொத்த வணிகப் பொருட்கள் மற்றும் சேவை ஏற்றுமதி 71.12 பில்ல... மேலும் பார்க்க

சத்ரபதி சிவாஜி சிலையைத் தொடரும் துரதிருஷ்டம்: கட்டுமானத்தில் பெரிய ஓட்டை!

மும்பை: ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி மன்னரின் சிலை நிறுவப்பட்ட இடத்தில் சிலையை தாங்கி நிற்கும் கட்டுமானத்தில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது. மராட்டிய பேரரசர் சிவாஜியின் புகழைப் பறைசாற்றும் வகையில், ... மேலும் பார்க்க

இது போருக்கான சகாப்தம் அல்ல: மோடி

இது போருக்கான சகாப்தம் அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்கு பிரதமா் ... மேலும் பார்க்க

கேரளத்தில் கொட்டித்தீர்க்கும் பருவமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கேரளத்தில் திங்கள்கிழமையும் இடைவிடாத பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்பட மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொ... மேலும் பார்க்க