செய்திகள் :

ஷில்பா ஷெட்டி, ஜாக்குலின், கெளரி கான்..! - ரெஸ்டாரன்ட் தொழிலில் முதலீடு செய்யும் பாலிவுட் பிரபலங்கள்

post image

மும்பையில் பாலிவுட் நட்சத்திரங்கள் தாங்கள் நடித்து சம்பாதிக்கும் பணத்தை ரியல் எஸ்டேட் மற்றும் ரெஸ்டாரன்ட்களில் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர். நடிகர் அமிதாப்பச்சனும், அவரது மகன் அபிஷேக் பச்சனும் பெரிய அளவில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளனர். மும்பை மட்டுமல்லாது உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியிலும் ரியல் எஸ்டேட்டில் அமிதாப்பச்சன் பெரிய அளவில் முதலீடு செய்து வருகிறார்.

ஷாருக்கான் ஏற்கனவே பல தொழில்களில் முதலீடு செய்துள்ள நிலையில், இப்போது அவரது மனைவி கெளரி கான் சொந்தமாக மும்பையில் ரெஸ்டாரன்ட் ஒன்றையும் நடத்தி வருகிறார். தோரி என்ற அந்த ரெஸ்டாரன்ட் ஷாருக்கான் வசிக்கும் பாந்த்ரா பகுதியில் செயல்படுகிறது. இந்த ரெஸ்டாரன்டிற்கு ஷாருக்கான் அடிக்கடி தனது குடும்பத்தோடு வந்து செல்வது வழக்கம். ஆனால் அவர்கள் வந்து செல்ல தனியாக ஒரு ரகசிய வாசல் இருக்கிறது.

ஜாக்குலின் பெர்னாண்டஸ்

அந்த ரகசிய வாசல் வழியாகத்தான் ஷாருக்கானும், அவரது குடும்பத்தினரும் வந்து செல்வது வழக்கம். இது குறித்து தோரி ரெஸ்டாரண்டில் தலைமை சமையல்காரராக இருக்கும் ஸ்டீபான் கூறுகையில், ''உணவகத்தில் ரகசிய வாசல் ஒன்று இருக்கிறது. அதனை அனைவரும் பயன்படுத்த முடியாது. கான் குடும்பத்தினர் மட்டும் பயன்படுத்துவர். ஷாருக்கானின் இளைய மகன் ஆப்ராம் அடிக்கடி உணவை ஆர்டர் செய்து சாப்பிடுவார். ஆனால் ஷாருக்கானின் மூத்த மகன் ஆர்யன் கான், மகள் சுஹானா ஆகியோர் நண்பர்களுடன் உணவகத்திற்கு வருவதுண்டு. ஷாருக்கான் பெரும்பாலும் குடும்பத்தோடுதான் வருவார். ஒரு முறை ஷாருக்கானின் மேலாளர் பூஜாவின் பிறந்தநாளை இங்கு கொண்டாடினர்.

பாலிவுட் தயாரிப்பாளரும், இயக்குனருமான கரண் ஜோகர் தென்மும்பையில் நியுமா என்ற பெயரில் ஒரு ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறார். பாந்த்ராவில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பாலி தாய் என்ற பெயரில் ஒரு ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறார். இது தவிர கொலாபாவிலும் ஒரு ரெஸ்டாரன்ட் நடத்திக்கொண்டிருக்கிறார். நடிகை ஆயிஷா தகியா தனது கணவர் பர்ஹான் ஆஸ்மியுடன் இணைந்து கேப் பாஸிலிகோ என்ற பெயரில் ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறார். நடிகை ஷில்பா ஷெட்டி பாஸ்டியன் என்ற பெயரில் நடத்தப்பட்டு வரும் ரெஸ்டாரண்டில் 50 சதவீத பங்குதாரராக இருக்கிறார்.

சம்பிளேஸ் என்ற பெயரில் நடிகர் பாபி தியோல் நடத்தி வரும் உணவகம் பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இது அந்தேரியில் இருக்கிறது. நடிகர் பாட்ஷா மும்பையில் டிராகன் பிளே என்ற பெயரில் ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறார். தி குட்வைப் என்ற பெயரில் நடிகை தியா மிர்சா தனது கணவரோடு சேர்ந்து உணவகம் நடத்தி வருகிறார். இது தவிர மெளனி ரானி, ரோஹித் பால், சுனில் ஷெட்டி, சுன்கி பாண்டே என மொத்தம் 15க்கும் அதிகமான பாலிவுட் பிரபலங்கள் மும்பையில் ரெஸ்டாரன்ட் மூலமும் சம்பாதித்து வருகின்றனர். நடிகை மலைகா அரோரா தனது மகனுடன் சேர்ந்து ஸ்கார்லெட் ஹவுஸ் என்ற பெயரில் பாந்த்ராவில் ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறார்.

மலைகா அரோராஜ்

மும்பை கார்ரோடு பகுதியில் இருக்கும் ஆலிவ் பார் அண்ட் கிச்சன் பாலிவுட் பிரபலங்களின் விருப்பமான ரெஸ்டாரன்டாக இருக்கிறது. இங்கு ஷாருக்கான், சைஃப் அலிகான், சாரா அலிகான், பிரியங்கா சோப்ரா என அனைவரும் வருவது வழக்கம். பாந்த்ரா மற்றும் கார்ரோடு பகுதியில் தான் அதிக அளவில் பாலிவுட் பிரபலங்கள் வசித்து வருகின்றனர். எனவே பெரும்பாலான ஆடம்பர ரெஸ்டாரன்ட், நைட்கிளப் போன்றவை இப்பகுதியில் இருக்கிறது. கிரிக்கெட் வீரர்களும் ரெஸ்டாரன்டில் முதலீடு செய்துள்ளனர். விராட் கோலி தனது மனைவி அனுஷ்காவுடன் சேர்ந்து ரெஸ்டாரண்ட் ஒன்றை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

``பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்கள் முஸ்லிம்களே அல்ல" - கொந்தளித்த அமீர் கான்

2007-ம் ஆண்டு அமீர் கான் இயக்கி நடித்த படம் 'தாரே ஜமீன் பர்'. ஒரு வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கும் அமீர்கானுக்கும் இடையேயான பாசப்பிணைப்பை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. இந்த... மேலும் பார்க்க

Aamir Khan: "என் கனவுப் படமான மகாபாரதம்தான் என் கடைசிப் படமா?" - நடிகர் ஆமீர் கான் பதில்

பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் புதிய படமான 'சிதாரே ஜமீன் பர்' வரும் ஜூன் 20-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதையொட்டி இப்படத்தை விளம்பரப்படுத்தும் வேலையில் பிஸியாக இருக்கிறார்.ஆமீர் கான் நேர்காணல் ஒன்றி... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: ``விமானி என் நண்பர்தான்"- 12th Fail பட நடிகர் விக்ராந்த் மெஸ்ஸி உருக்கம்

இந்தியாவின் மிகவும் துன்பமான தினங்களில் ஒன்று நேற்று. குஜராத் மாநிலம் அகமாதாபாத்தில் எதிர்பாராத விதமாக ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 241 பேர் பலியாகியிருக்கின்றனர். அதில் ஒருவர் 12th ஃபைல் ... மேலும் பார்க்க

Anurag Kashyup: `மாமியார் மருமகள் கதைகளை...' - நெட்ஃபிளிக்ஸ் CEO, ஏக்தா கபூருடன் மோதல் ஏன்?

தயாரிப்பாளரும் தொலைக்காட்சி அதிபருமான ஏக்தா கபூர், அனுராக் காஷ்யப் கூறிய "மாமியார் மருமகள் கதைகள்" விமர்சனத்துக்காக கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார். தற்போது பாலிவுட்டில் பெரும் விவாதமாகியிருக்கும் இந... மேலும் பார்க்க

Aamir Khan: ``நானும் மணிரத்னமும் இணைய வேண்டிய படம்..'' - அமீர் கான் சொன்ன கதை என்ன?

இந்திய சினிமாவின் உச்சத்தில் இருக்கும் கலைஞர்களான அமீர் கான் மற்றும் மணிரத்னம் இடையே நல்ல நட்புறவு இருந்தாலும், இருவரும் இதுவரைத் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியது இல்லை. ஷாரூக் கான், அபிஷேக் பச்சன்... மேலும் பார்க்க

Deepika: ``நான் தான் பிரேக் அப் செய்தேன்; இப்போது அவர் ஸ்டார்'' - முன்னாள் காதலன் பேசியதென்ன?

தீபிகா படுகோனே 2000-களில் மும்பைக்கு வந்துள்ளார். மாடலிங் துறையில் வெற்றிகரமாக இயங்கிய அவர், பின்னர் பாலிவுட்டில் கால் பதித்துள்ளார். அந்த காலத்தில் தீபிகா மற்றும் முசமில் இப்ராஹிம் காதலித்துள்ளனர். ம... மேலும் பார்க்க