செய்திகள் :

Aamir Khan: ``நானும் மணிரத்னமும் இணைய வேண்டிய படம்..'' - அமீர் கான் சொன்ன கதை என்ன?

post image

இந்திய சினிமாவின் உச்சத்தில் இருக்கும் கலைஞர்களான அமீர் கான் மற்றும் மணிரத்னம் இடையே நல்ல நட்புறவு இருந்தாலும், இருவரும் இதுவரைத் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியது இல்லை.

ஷாரூக் கான், அபிஷேக் பச்சன், விவேக் ஓபராய், அஜய் தேவகன் போன்ற இந்தி நடிகர்களை இயக்கியுள்ளார் மணிரத்னம். இந்த வரிசையில் அமீர்கான் இணைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

Mani Ratnam

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய அமீர்கான், ஒரு ப்ராஜக்டில் ஒன்றாக பணியாற்ற ஒரு கதையைத் தேர்ந்தெடுத்ததாகவும், கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

அமீர்கான் கூறியதன்படி இரண்டு லெஜண்ட்களும் இணைவதற்கு தேர்தெடுத்த கதை மற்றொரு லெஜண்டான இந்திய உருது எழுத்தாளர் இஸ்மத் சுக்தாயின் கர்வாலி என்ற சிறுகதைதானாம்.

இந்த கதையில் வரும் லஜ்ஜோ என்ற பாத்திரத்தை மையமாக வைத்து திரைக்கதை உருவாக்கத் திட்டமிட்டனராம்.

aamir khan

"நான் மணி ரத்னத்தின் மிகப் பெரிய ரசிகன். எப்போதுமே அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டுமென்று விரும்பினேன்.

அவரைப் பலமுறை சந்தித்திருக்கிறேன். அவர் வீட்டில் நாங்கள் சிறப்பான விஷயங்களை உரையாடியிருக்கிறோம்.

நாங்கள் இருவரும் ஒருவர் மற்றவருடன் பணியாற்ற விரும்பினோம். லஜ்ஜோவில் கிட்டத்தட்ட இருவரும் இணைந்து பணியாற்ற தயாரானோம். ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை, அது என் சம்பந்தப்பட்டதோ, அவர் சம்மந்தப்பட்டதோ அல்ல" எனக் கூறியுள்ளார் அமீர்கான்.

மேலும், "நாங்கள் இருவரும் நிச்சயமாக ஒருநாள் இணைந்து பணியாற்றுவோம் என இன்னமும் நம்பிக்கைக் கொண்டிருக்கிருக்கிறேன்" என்று கூறியுள்ளார் அமீர்கான்.

Deepika: ``நான் தான் பிரேக் அப் செய்தேன்; இப்போது அவர் ஸ்டார்'' - முன்னாள் காதலன் பேசியதென்ன?

தீபிகா படுகோனே 2000-களில் மும்பைக்கு வந்துள்ளார். மாடலிங் துறையில் வெற்றிகரமாக இயங்கிய அவர், பின்னர் பாலிவுட்டில் கால் பதித்துள்ளார். அந்த காலத்தில் தீபிகா மற்றும் முசமில் இப்ராஹிம் காதலித்துள்ளனர். ம... மேலும் பார்க்க

Sitaare Zameen Par: "இதனால் நஷ்டம் ஏற்படலாம்; ஆனால்..." - OTTயில் படத்தை வெளியிட மறுத்த ஆமீர் கான்

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் நடித்த சிதாரே ஜமீன் பர் படம் வரும் 20ம் தேதி திரைக்கு வருகிறது.இப்படத்தை ஆமீர் கான் பெரிதும் நம்பி இருக்கிறார். இதற்காகத் தொடர்ச்சியாகப் படத்தை விளம்பரப்படுத்தும் வேலையில் ஆ... மேலும் பார்க்க

Aamir Khan: `மகாபாரதம்' படத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கா? - நடிகர் ஆமீர் கான் சொல்வது என்ன?

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தற்போது தனது புதிய படமான சிதாரே ஜமீன் பர் படத்தை விளம்பரப்படுத்தும் வேலையில் பிஸியாக இருக்கிறார். இப்படம் வரும் 20-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், டிவி ஷோ ஒன்றி... மேலும் பார்க்க

Madhavan: தகர்ந்த ராணுவ கனவு; கைகொடுத்த சினிமா; மாதவன் நடிகரான கதை!

நடிகர் ஆர்.மாதவன் ஆரம்பத்தில் இந்தி படங்களில் நடித்தபோதிலும், தமிழில் நடித்த பிறகுதான் பிரபலமானார். ஆர்.மாதவன் இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் நடிகராக மாறியது வித்தியாசமான ஒரு அனுபவம்... மேலும் பார்க்க

"கன்னித்தன்மையுள்ள மனைவியை எதிர்பார்க்காதீர்" - வைரலாகும் பிரியங்கா சோப்ராவின் பழைய பேட்டி

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தமிழன் படத்தில் அறிமுகமானாலும் பின்னர் பாலிவுட் பக்கம் சென்றார்.பாலிவுட்டைத் தொடர்ந்து இப்போது அமெரிக்கப் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவி... மேலும் பார்க்க

``தலைசிறந்த ஆன்மிக நகரில் எனது வீடு.." - அயோத்தி ராமர் கோயில் அருகில் நிலம் வாங்கிய அமிதாப்பச்சன்

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மும்பையில் பெரிய அளவில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகிறார். ஏராளமான வீடு மற்றும் அலுவலகங்களை வாங்கி வாடகைக்கு விட்டிருக்கிறார்.மும்பைக்கு அடுத்த படியாக தனது சொந்த... மேலும் பார்க்க