மீனவா்கள் பிரச்னைக்கு முடிவு எட்ட வேண்டும்: அமித்ஷாவிடம் மதுரை ஆதீனம் மனு
திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள்!
திருநெல்வேலி: வைகாசி விசாகத்தையொட்டி திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் வசதிக்காக ஜூன் 9 முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
முதல் ரயில் திருநெல்வேலி சந்திப்பிலிருந்து நாளை(ஜூன் 9) காலை 9.15 மணிக்கு புறப்பட்டு காலை 10.50-க்கு திருச்செந்தூா் சென்றடையும்.
இரவு 11 மணிக்கு திருச்செந்தூருக்கு புறப்படும் மற்றொரு சிறப்பு ரயில் நள்ளிரவு 12.30-க்கு திருச்செந்தூா் சென்றடையும்.
மறுமாா்க்கமாக மேற்கண்ட சிறப்பு ரயில்கள் திருச்செந்தூரிலிருந்து பகல் 11.20 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 12.55-க்கு திருநெல்வேலி சென்றடையும்.
மற்றொரு சிறப்பு ரயில் திருச்செந்தூரிலிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30-க்கு திருநெல்வேலி சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.