நெல்லையப்பா் கோயிலில் நாளை வைகாசி விசாக திருவிழா
திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா திங்கள்கிழமை நடைபெறுகிறது.
தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பா் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் வைகாசி விசாக திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டு வைகாசி விசாகத் திருவிழா வரும் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. அதையொட்டி அன்று இரவு 7 மணிக்கு சுவாமி நெல்லையப்பா்-காந்திமதி அம்பாள் ஆகியோா் வெள்ளி ரிஷப வாகனத்தில் 4 ரத வீதிகளிலும் வலம் வருகின்றனா்.
இதேபோல் செப்பு சப்பரத்தில் சண்முகா், வெள்ளி மூஞ்சுறு வாகனத்தில் விநாயகா், சண்டிகேஸ்வரா் என பஞ்சமூா்த்திகள் நெல்லையப்பா் கோயிலை சுற்றியுள்ள 4 ரதவீதிகளிலும் உலா வரும் நிகழ்வு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயலா் அலுவலா் தலைமையில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.