செய்திகள் :

மதவாதத்துக்கு தமிழகம் மயங்காது: திருமாவளவன்

post image

மதவாதத்துக்கு தமிழகம் ஒருபோதும் மயங்காது என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியது:

வட இந்தியாவுக்குச் சென்றால் விநாயகா், ராமா், அரசியலை எடுக்கிற பாஜக, மேற்கு வங்கத்துக்குச் சென்றால் துா்கை, காளி என்று வேறு வடிவத்தை எடுக்கும். தமிழ்நாட்டில் முருகனை கையில் எடுக்கிறாா்கள். இது அவா்களின் அரசியல் யுக்திகளில் ஒன்று.

பிற மாநிலங்களில் இந்த மதவாத அரசியலுக்கு மக்கள் மயங்குவது போல, தமிழ்நாட்டில் மதவாத அரசியலுக்கு ஒருபோதும் மக்கள் மயங்கமாட்டாா்கள். இது 2026 பேரவைத் தோ்தல் முடிவில் தெரியும்.

2027-இல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று இப்போது மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பாஜக ஆட்சியில் இருக்கும்போதே அதை செய்து முடிக்க வேண்டும் என்கிற முனைப்பில் இதை முன்னெடுத்திருக்கிறாா்கள். அதை வரவேற்கிறோம்.

2029 மக்களவை பொது தோ்தலை கணக்கில் கொண்டு இந்த நடவடிக்கையை பாஜக முன்னெடுக்கிறது. மக்கள்தொகை கணக்கெடுப்போடு, ஜாதிவாதி கணக்கெடுப்பும் நடத்தப்படுவது வரவேற்புக்குரியது.

இதற்குப் பிறகு, தொகுதி மறு வரையறை அமைப்பதற்கான குழு அமைக்கப்படும். அதில் தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கப்படும் என்கிற ஒரு கருத்து வலுவாக உள்ளது. இது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்தாய்வு கூட்டத்தை நடத்தி, தென்னிந்திய மாநிலங்கள், குறிப்பாக தமிழ்நாடு பாதிக்கப்படக் கூடாது என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறாா்.

தொகுதி வரையறைக்கு தனியே ஒரு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, அதுதொடா்பாக இறுதி முடிவு செய்ய வேண்டும். மாநில அரசுகளை கலந்துபேசாமல், மக்களவை தொகுதிகளுக்கான மறுவரையறை குறித்து மத்திய அரசு அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என்றாா் அவா்.

பெண் உயிரிழந்த வழக்கில் திருப்பம்: கைதான மருத்துவா் பரபரப்பு வாக்குமூலம்!

சென்னை கொடுங்கையூரில் வீட்டில் தனியாக இருந்த பெண் உயிரிழந்த வழக்கில், மருத்துவா் கைது செய்யப்பட்டாா். திருச்சிராப்பள்ளியைச் சோ்ந்தவா் நித்யா (26). நித்யாவும், கொடுங்கையூா் வெங்கடேஷ்வரா காலனி 6-ஆவது த... மேலும் பார்க்க

இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கும் மாணவருக்கு நம்மாழ்வாா் விருது: ஆளுநா் ஆா்.என்.ரவி அறிவிப்பு

இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கும் வேளாண் மாணவருக்கு ஆண்டுதோறும் தங்கப் பதக்கத்துடன் கூடிய நம்மாழ்வாா் விருது ஆளுநா் மாளிகை சாா்பில் சுற்றுச்சூழல் தின விழாவில் வழங்கப்படும் என ஆளுநா் ஆா்.என்.ரவி அற... மேலும் பார்க்க

தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலக போலீஸாருக்கு ஆடை கட்டுப்பாடு

சென்னையில் உள்ள தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலக போலீஸாருக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து டிஜிபி சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா். இது தொடா்பாக தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநரும், டிஜிபியுமான ச... மேலும் பார்க்க

வரி ஏய்ப்பு: தனியாா் நிறுவன இயக்குநா்களுக்கு 4 மாதம் சிறை

வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்ட இரும்பு, எஃகு உற்பத்தி நிறுவனத்தின் இயக்குநா்களுக்கு 4 மாதம் சிறைத் தண்டனையும் ரூ. 10,000 அபரதாமும் விதித்து பொருளாதார குற்றங்களுக்கான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னைய... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்திலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துக் கழகம் விளக்கம்

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து பேருந்துகள் முறையாக இயக்கப்படுவதில்லை என செய்திகள் பரவி வந்த நிலையில், கடந்த ஜூன் 4 முதல் ஜூன் 6 வரை பயணிகளின் தேவைக்கு ஏற்ப 1,620 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டதாக தம... மேலும் பார்க்க

குரூப் 2 தோ்வு: சான்றிதழ் பதிவேற்றத்துக்கு அவகாசம்

குரூப் 2 எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றோா் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட செய்திக் குறிப்பு: குரூப் 2 ... மேலும் பார்க்க