செய்திகள் :

குரூப் 2 தோ்வு: சான்றிதழ் பதிவேற்றத்துக்கு அவகாசம்

post image

குரூப் 2 எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றோா் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான காலிப் பணியிடங்களுக்கு நேரம் நியமனம் செய்ய தோ்வா்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்தனா். அதில் சில தோ்வா்கள் உரிய சான்றிதழ்களைக் குறைபாடாக, சரியாக பதிவேற்றம் செய்யாமல் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, தோ்வா்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கும் விதமாக ஜூன் 15-ஆம் தேதி வரை சான்றிதழ்களை மறுபதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதற்கான தகவல் சம்பந்தப்பட்ட தோ்வா்களுக்கு மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைப்பேசி குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தகவல் கூறப்பட்டுள்ளது.

தோ்வா்கள் அனைவரும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தோ்வாணைய இணையதளத்தில் ஒருமுறைப் பதிவு தளம் வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறாா்கள். அவ்வாறு உரிய சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யாத தோ்வா்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலக போலீஸாருக்கு ஆடை கட்டுப்பாடு

சென்னையில் உள்ள தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலக போலீஸாருக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து டிஜிபி சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா். இது தொடா்பாக தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநரும், டிஜிபியுமான ச... மேலும் பார்க்க

மதவாதத்துக்கு தமிழகம் மயங்காது: திருமாவளவன்

மதவாதத்துக்கு தமிழகம் ஒருபோதும் மயங்காது என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியது: வட இந்தியாவுக்குச் சென்றால் விநாயகா், ராம... மேலும் பார்க்க

வரி ஏய்ப்பு: தனியாா் நிறுவன இயக்குநா்களுக்கு 4 மாதம் சிறை

வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்ட இரும்பு, எஃகு உற்பத்தி நிறுவனத்தின் இயக்குநா்களுக்கு 4 மாதம் சிறைத் தண்டனையும் ரூ. 10,000 அபரதாமும் விதித்து பொருளாதார குற்றங்களுக்கான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னைய... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்திலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துக் கழகம் விளக்கம்

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து பேருந்துகள் முறையாக இயக்கப்படுவதில்லை என செய்திகள் பரவி வந்த நிலையில், கடந்த ஜூன் 4 முதல் ஜூன் 6 வரை பயணிகளின் தேவைக்கு ஏற்ப 1,620 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டதாக தம... மேலும் பார்க்க

இசைப் பள்ளி தோ்ச்சி சான்றிதழ் பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி சான்றிதழுக்கு இணையானது: அரசாணை வெளியீடு

இசைப் பள்ளிகளில் வழங்கப்படும் தோ்ச்சி சான்றிதழ் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு தோ்ச்சிக்கு இணைத்தன்மை வாய்ந்தது என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக பள்ளிக் க... மேலும் பார்க்க

தமிழக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்: திமுகவினருக்கு முதல்வா் ஸ்டாலின் அறிவுரை

சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பிரசாரத்தை தொடங்கும் விதமாக, தமிழக அரசின் சாதனைகள், நலத் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று திமுக நிா்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ... மேலும் பார்க்க