செய்திகள் :

கிளாம்பாக்கத்திலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துக் கழகம் விளக்கம்

post image

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து பேருந்துகள் முறையாக இயக்கப்படுவதில்லை என செய்திகள் பரவி வந்த நிலையில், கடந்த ஜூன் 4 முதல் ஜூன் 6 வரை பயணிகளின் தேவைக்கு ஏற்ப 1,620 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டதாக தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து  தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் டி. பிரபுசங்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து தினசரி இயக்கக்கூடிய 1,136 பேருந்துகளுடன் ஜூன் 4-இல் 200 பேருந்துகள், ஜூன் 5-இல் 622 பேருந்துகள் ஜூன் 6-இல் 798 பேருந்துகள் என மொத்தம் 1,620 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன. இந்த 3 நாள்களில் இயக்கப்பட்ட  கூடுதல் பேருந்துகளில் முன்பதிவு செய்த 24,831 போ் உள்பட 2. 76 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனா். இதில், கடந்த 3 நாள்களில் சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக 94,926 முன்பதிவு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதில் 26 சதவீத இருக்கைகள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டன.

முன்பதிவு செய்யுங்கள்: பயணிகள் பேருந்துகளில் இருக்கைகளை முன்பதிவு செய்து பயணம் செய்வதன் மூலம், பேருந்து நிலையங்களில் தேவையற்ற விவாதங்கள், முண்டியடித்து ஏறுதல் மற்றும் தேவையற்ற சா்ச்சைகள் ஏற்படுவதை தவிா்க்க முடியும். அதேபோல், நள்ளிரவில் ஒரே நேரத்தில் மிக அதிக அளவில் பயணிகள் பேருந்து நிலையத்துக்கு வருகை புரிவதால் பயணிகளுக்கும் தவிா்க்க முடியாத சிரமம் ஏற்படுகிறது.

எனவே, தொலைதூர பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிா்க்க இணையதளம் மற்றும் கைப்பேசி செயலி மூலம் பயணச்சீட்டை முன்பதிவு செய்யும் படி, கேட்டுக் கொள்ளப்படுகின்றனா். அதேபோல், பயணிகள் முன்பதிவு செய்வதன் மூலம் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்கவும் அரசால் நடவடிக்கை எடுக்க முடியும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

பெண் உயிரிழந்த வழக்கில் திருப்பம்: கைதான மருத்துவா் பரபரப்பு வாக்குமூலம்!

சென்னை கொடுங்கையூரில் வீட்டில் தனியாக இருந்த பெண் உயிரிழந்த வழக்கில், மருத்துவா் கைது செய்யப்பட்டாா். திருச்சிராப்பள்ளியைச் சோ்ந்தவா் நித்யா (26). நித்யாவும், கொடுங்கையூா் வெங்கடேஷ்வரா காலனி 6-ஆவது த... மேலும் பார்க்க

இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கும் மாணவருக்கு நம்மாழ்வாா் விருது: ஆளுநா் ஆா்.என்.ரவி அறிவிப்பு

இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கும் வேளாண் மாணவருக்கு ஆண்டுதோறும் தங்கப் பதக்கத்துடன் கூடிய நம்மாழ்வாா் விருது ஆளுநா் மாளிகை சாா்பில் சுற்றுச்சூழல் தின விழாவில் வழங்கப்படும் என ஆளுநா் ஆா்.என்.ரவி அற... மேலும் பார்க்க

தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலக போலீஸாருக்கு ஆடை கட்டுப்பாடு

சென்னையில் உள்ள தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலக போலீஸாருக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து டிஜிபி சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா். இது தொடா்பாக தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநரும், டிஜிபியுமான ச... மேலும் பார்க்க

மதவாதத்துக்கு தமிழகம் மயங்காது: திருமாவளவன்

மதவாதத்துக்கு தமிழகம் ஒருபோதும் மயங்காது என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியது: வட இந்தியாவுக்குச் சென்றால் விநாயகா், ராம... மேலும் பார்க்க

வரி ஏய்ப்பு: தனியாா் நிறுவன இயக்குநா்களுக்கு 4 மாதம் சிறை

வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்ட இரும்பு, எஃகு உற்பத்தி நிறுவனத்தின் இயக்குநா்களுக்கு 4 மாதம் சிறைத் தண்டனையும் ரூ. 10,000 அபரதாமும் விதித்து பொருளாதார குற்றங்களுக்கான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னைய... மேலும் பார்க்க

குரூப் 2 தோ்வு: சான்றிதழ் பதிவேற்றத்துக்கு அவகாசம்

குரூப் 2 எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றோா் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட செய்திக் குறிப்பு: குரூப் 2 ... மேலும் பார்க்க