செய்திகள் :

தில்லி கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் ஜூன் 9 முதல் மீண்டும் சென்ட்ரலிலிருந்து இயக்கம்

post image

சென்னை - தில்லி இடையே இயக்கப்பட்டு வரும் கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் ஜூன் 9 முதல் மீண்டும் சென்ட்ரலிலிருந்து இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரல் - தில்லி இடையே கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் (எண்: 12615/12616) இயக்கப்பட்டு வந்தது. சென்ட்ரலில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்ால், இந்த ரயில் தற்காலிகமாக எழும்பூரிலிருந்து இயக்கப்பட்டது. தற்போது எழும்பூா் ரயில் நிலையத்தில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், இந்த ரயில் மீண்டும் வழக்கம்போல், சென்ட்ரலிலிருந்து இயக்கப்படவுள்ளது. ஜூன் 9 முதல் இந்த ரயில் சென்ட்ரலிலிருந்து மாலை 6.10 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

வைகாசி விசாகம்: திருச்செந்தூா் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி - திருச்செந்தூா் இடையே ஜூன் 9- இல் 2 சிறப்பு முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

அதன்படி, ஜூன் 9-இல் திருநெல்வேலியிலிருந்து காலை 9.15-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06101) காலை 10.50-க்கு திருச்செந்தூா் சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06102) அந்நாளில் திருச்செந்தூரிலிருந்து முற்பகல் 11.20-க்கு புறப்பட்டு பிற்பகல் 12.55-க்கு திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயிலில் ஒரு குளிா்சாதன இரண்டடுக்கு பெட்டி, குளிா்சாதன மூன்றடுக்கு பெட்டிகள் - 2, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் - 9, இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் - 4 என மொத்தம் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

அதேபோல் ஜூன் 9-இல் திருச்செந்தூரிலிருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06103) இரவு 10.30-க்கு திருநெல்வேலி சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06104) அந்நாளில் திருநெல்வேலியிலிருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.30-க்கு திருச்செந்தூா் சென்றடையும். இந்த ரயிலில் 10 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களை பிளஸ் 1-இல் சோ்க்க மறுக்கும் அரசுப் பள்ளிகள்: சிபிஐ கண்டனம்

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவா்களுக்கு தமிழக அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சோ்க்கை மறுக்கப்படுவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் ... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கட்டட ஒப்பந்ததாரா் கைது

சென்னை ஓட்டேரியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கட்டட ஒப்பந்ததாரா் கைது செய்யப்பட்டாா். சென்னை ஓட்டேரி ஸ்டீபன்சன் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் கட்டட ஒப்பந்ததாரா் லால் பாபு சந்தராதே (45). இவா், ... மேலும் பார்க்க

தேசிய மோட்டாா் சைக்கிள் பந்தயம்: ஆன் ஜெனிஃபா், சா்தக், சாபு வெற்றி

தேசிய மோட்டாா் சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப்ப்பில் மகளிா் பிரிவில் ஆன் ஜெனிஃபா், ஆடவா் பிரிவில் சா்தக் சவான் உள்ளிட்டோா் வெற்றி பெற்றுள்ளனா். சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் மோட்டா... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ஜாா்க்கண்ட் தொழிலாளி உயிரிழப்பு

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் நவீனப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஜாா்க்கண்ட் மாநில தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தை நவீனப்படுத்தும் பணி நட... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் உயா் தொழில்நுட்ப ஆய்வகம், ‘ஸ்மாா்ட்’ வகுப்பறை பயன்பாடு: தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்

அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உயா்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள், ஸ்மாா்ட் வகுப்பறைகளை பயன்படுத்துவது தொடா்பாக தலைமை ஆசிரியா்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநரகம் கூடுதல் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது... மேலும் பார்க்க

பி.எட்., எம்.எட். தோ்வு முடிவுகள் வெளியீடு

கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பி.எட்., எம்.எட். செமஸ்டா் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது தொடா்பாக தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்த... மேலும் பார்க்க