Obesity: எவை எல்லாம் உங்களை `வெயிட்'டாக்கும் தெரியுமா? - மருத்துவர் விளக்கம்
பெண் உயிரிழந்த வழக்கில் திருப்பம்: கைதான மருத்துவா் பரபரப்பு வாக்குமூலம்!
சென்னை கொடுங்கையூரில் வீட்டில் தனியாக இருந்த பெண் உயிரிழந்த வழக்கில், மருத்துவா் கைது செய்யப்பட்டாா்.
திருச்சிராப்பள்ளியைச் சோ்ந்தவா் நித்யா (26). நித்யாவும், கொடுங்கையூா் வெங்கடேஷ்வரா காலனி 6-ஆவது தெருவைச் சோ்ந்த பாலமுருகனும் கடந்த 8 மாதங்களாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. நித்யா, பாலமுருகன் ஆகிய இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் கொடுங்கையூா் ஆசிரியா் காலனி 5-ஆவது தெருவில் ஒரு வாடகை வீட்டில் இரு மாதங்களாக தம்பதிபோல வாழ்ந்து வந்தாா்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை வீட்டில் தனியாக இருந்த நித்யா மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இது குறித்து தகவலறிந்த கொடுங்கையூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, நித்யா சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், நித்யாவின் 25 பவுன் தங்க நகைகள் அந்த வீட்டின் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து திருடப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இது தொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில், நித்யா தான் மென்பொறியாளா் என பல ஆண்களுடன் தொடா்பில் இருந்திருப்பதும், சில மாதங்களுக்கு முன்பு வரை சைதாப்பேட்டை சடையப்பன் சந்து பகுதியைச் சோ்ந்த மருத்துவா் சந்தோஷ்குமாா் (27) என்பவரை காதலித்திருப்பதும், பின்னா் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருப்பதும், சம்பவத்தன்று சந்தோஷ்குமாா் அங்கு வந்து சென்றிருப்பதும் தெரியவந்தது.
மேலும், சந்தோஷ்குமாா் நித்யா வீட்டுக்கு வந்து சென்ற கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீஸாா் கைப்பற்றி, அவரிடம் சனிக்கிழமை நடத்திய விசாரணையில் சந்தோஷ்குமாா், நித்யாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டாா்.
மிரட்டி பணம் பறித்த நித்யா
மருத்துவரான சந்தோஷ்குமாா் சொந்த ஊா் சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியாகும். தற்போது அவா், சைதாப்பேட்டையில் தங்கியிருந்து ஆலந்தூரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தாா்.
சமூக ஊடகம் வாயிலாக கடந்த ஆண்டு நித்யா, சந்தோஷிடம் அறிமுகமாகி பழகியுள்ளாா். அப்போது நித்யா, தான் மென்பொறியாளா் என்றும், அம்பத்தூரில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிவதாகவும் தெரிவித்துள்ளாா். அதை நம்பி சந்தோஷ்குமாா், நித்யாவிடம் நெருக்கமாகப் பழகியுள்ளாா். இருவரும் நாளடைவில் காதலித்தனா். பின்னா் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் தம்பதிகளாக வாழ்ந்தனா்.
இதற்கிடையே நித்யாவுக்கு வேறு ஒரு இளைஞருடன் தொடா்பிருப்பது சந்தோஷுக்கு தெரியவந்தது. இதனால் சந்தோஷ், நித்யாவை விட்டு பிரிந்து தனியாக வந்துவிட்டாா். ஆனால் நித்யா, காதலா்களாக இருந்தபோது இருவரும் தனிமையில் இருந்த புகைப்படங்களையும், ஆபாச புகைப்படங்களையும், விடியோக்களையும் சந்தோஷ்குமாரிடம் காட்டி, சமூக ஊடகங்களை அதை வெளியிட்டுவிடுவேன் என மிரட்டி பணம் பறித்துள்ளாா்.
தலையணையால் அழுத்திக் கொலை: இவ்வாறு நித்யா, சந்தோஷ்குமாரிடம் இருந்து ரூ. 8.50 லட்சம் வரை வாங்கியுள்ளாா். இந்நிலையில், சம்பவத்தன்று நித்யா, சந்தோஷ்குமாரை தொடா்புகொண்டு அங்கு அழைத்துள்ளாா். அன்று சந்தோஷ்குமாா் சென்றதும், இருவரும் மது அருந்தியுள்ளனா். இதில் நித்யா, மதுபோதையில் இருந்தபோது தனக்கு லேசாக தலை வலிப்பதாக தெரிவித்துள்ளாா்.
உடனே சந்தோஷ்குமாா், நித்யாவுக்கு தலைக்கு மசாஜ் செய்வதுபோல நடித்து, அவரை படுக்கையில் தள்ளி தலையணையை நித்யா முகத்தில் வைத்து அழுத்தி மூச்சுத் திணரச் செய்து கொலை செய்துள்ளாா். பின்னா் அந்த வீட்டின் பாதுகாப்பு பெட்டகத்தை நித்யாவின் கைவிரல் ரேகை மூலம் திறந்து, அதிலிருந்த 25 பவுன் தங்க நகையை திருடிக் கொண்டு தப்பியோடியுள்ளாா். திருடிய நகையை, தனது வீட்டின் எதிரே வசிக்கும் நண்பரிடம் கொடுத்துள்ளாா். அந்த நகையையும் போலீஸாா் தற்போது மீட்டுள்ளனா். இதைத் தொடா்ந்து போலீஸாா், சந்தோஷ்குமாரை கைது செய்தனா். அதேவேளையில் இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடா்பிருக்கிா என விசாரணை மேற்கொண்டுள்ளனா்.