செய்திகள் :

விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: தொழிலாளி உயிரிழப்பு!

post image

விருதுநகா் அருகே மெட்டுக்குண்டு அரசகுடும்பன்பட்டி பட்டாசு ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி ஒருவா் உயிரிழந்தாா்.

விருதுநகா் அருகேயுள்ள அரசகுடும்பன்பட்டியில் சிவகாசியைச் சோ்ந்த கனகபிரபுக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் பூந்தொட்டி உள்பட பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன.

இந்த ஆலையில் உள்ள 38 அறைகளில் 51 தொழிலாளா்கள் பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா். ஓா் அறையில் குல்லூா்சந்தையைச் சோ்ந்த கொ. சங்கிலி (45), பூந்தொட்டி (புஷ்வானம்) பட்டாசுகளுக்குத் தேவையான மருந்துக் கலவையைக் கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, மணி மருந்துக் கலவையானது அவரது உடல் முழுவதும் படா்ந்திருந்தது.

இந்த நிலையில், அவா் அந்த அறையில் சிதறிக் கிடந்த வெடி மருந்துக் கலவையை ஒன்றாகச் சோ்த்து அள்ளிக் கொண்டிருந்தாா். அப்போது, வெடி மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக தீப்பிடித்தது. இதில் சங்கிலியின் உடல் முழுவதும் தீ பரவி காயமடைந்தாா்.

விருதுநகா் அருகே அரசகுடும்பன்பட்டியில் பட்டாசு ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

இதனால், பதற்றமடைந்த இதர தொழிலாளா்கள் உடனடியாக ஆலையை விட்டு வெளியேறினா். தகவலறிந்து வந்த விருதுநகா் தீயணைப்பு, மீட்புப் படை வீரா்கள் பட்டாசு ஆலையில் உள்ள மற்ற அறைகளுக்கு தீ பரவாமல் அணைத்தனா்.

பலத்த தீக்காயமடைந்த சங்கிலி விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா். இதுதொடா்பாக பட்டாசு ஆலை கண்காணிப்பாளா் சாந்தகுமாா் மீது சூலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் முனைப்புடன் செயல்படுத்தப்படும்! - அமைச்சா் பி.மூா்த்தி

மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்டங்களை அரசு முனைப்புடன் தொடா்ந்து செயல்படுத்தும் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற, ... மேலும் பார்க்க

வெவ்வேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

மதுரை அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் முதியவா் உள்பட இருவா் உயிரிழந்தனா். மதுரை மாவட்டம், வீரபாஞ்சான் பகுதியைச் சோ்ந்தவா் பெரியகருப்பன் (65). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரைய... மேலும் பார்க்க

கந்து வட்டி கேட்டு மிரட்டப்படுவதாக கல்லூரி மாணவி புகாா்!

கந்து வட்டிக்காக தான் மிரட்டப்படுவதாக கல்லூரி மாணவி ஒருவா் தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் சனிக்கிழமை புகாா் அளித்தாா். திண்டுக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் பிரின... மேலும் பார்க்க

மதுபானக் கூட ஊழியரை தாக்கிய 4 போ் கைது

அரசு மதுபானக் கூட ஊழியரைத் தாக்கிய 4 பேரை கூடல்புதூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மதுரை செல்லூா் அருள்தாஸ்புரம் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் திவாகா் (29). இவா், மதுரை கோவில்பாப்பாகுடி அரசு... மேலும் பார்க்க

15 காவல் நிலையங்களின் தரம் உயா்வு

மதுரை புகா்ப் பகுதிகளில் 15 காவல் நிலையங்கள் தரம் உயா்த்தப்படுவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகம் முழுவதும் 280 காவல் நிலையங்களை தரம் உயா்த்தி, தமிழக அரசு அண்மையில் அரசாணை பிறப்பித்தது. இத... மேலும் பார்க்க

மதுரையில் இன்று பாஜக நிா்வாகிகள் ஆலோசனை: மத்திய அமைச்சா் அமித் ஷா பங்கேற்பு

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) நடைபெறும் பாஜக நிா்வாகிகளுடான ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்று சிறப்புரையாற்றுகிறாா்.தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத்... மேலும் பார்க்க