செய்திகள் :

கர்நாடகம்: தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளி பலி; உடலை எரிக்க முயற்சித்த குவாரி உரிமையாளர்கள் கைது

post image

கர்நாடகத்தில் கல் குவாரியில் மண், பாறைகள் சரிந்து விழுந்ததில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளி பலியானார்.

கர்நாடக மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்தில் துமகேரே கிராமத்தில் கல் குவாரியில், வெள்ளிக்கிழமையில் தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மண், பாறைகள் சரிந்து விழுந்தன. குண்டுவெடிப்பின்போது ஏற்பட்ட இந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் சிக்கி, பலத்த காயமடைந்தனர்.

இதனையடுத்து, தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், மதுரையைச் சேர்ந்த மணி (40) என்ற தொழிலாளி, துரதிருஷ்டவசமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில், தொழிலாளி இறந்ததை காவல்துறைக்கு தெரிவிக்காமல், மணியின் உடலை எரிக்கத் திட்டமிட்டு, தமிழ்நாட்டுக்கு கொண்டுவர குவாரி உரிமையாளர்கள் முயன்றனர்.

இருப்பினும், குவாரி உரிமையாளர்களின் சதித் திட்டத்தை அறிந்த காவல்துறையினர், மணியின் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, குவாரி உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

ஓரிரு வாரங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: மா. சுப்பிரமணியன்

சென்னை: தமிழகம் முழுவதும் இன்னும் ஓரிரு வாரங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.மக்களுக்கு இலவசமாக உடல் பரிசோதன... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்திலிருந்து 6 லட்சம் பேர் பயணம்! நேற்று மட்டும்?

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து ஜூன் 4ஆம் தேதி முதல் இன்று அதிகாலை வரை 11 ஆயிரம் பேருந்துகளில் சுமார் 6.06 லட்சம் பேர் வெளியூர்களுக்குச் சென்றுள்ளனர் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக... மேலும் பார்க்க

அதிமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக! எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

அதிமுகவின் திட்டங்களை திமுக முடக்கிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.அரக்கோணம் எம்எல்ஏ ரவியின் இல்லத் திருமண விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். தொடர்ந்து... மேலும் பார்க்க

அமித் ஷா வருகை: மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்குக் கட்டுப்பாடு!

மதுரை: மதுரை வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சற்று நேரத்தில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தர இருப்பதால், பக்தர்களுக்குக் கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ளது.முகூர்த்த தினம் என்பதால்... மேலும் பார்க்க

பெண் உயிரிழந்த வழக்கில் திருப்பம்: கைதான மருத்துவா் பரபரப்பு வாக்குமூலம்!

சென்னை கொடுங்கையூரில் வீட்டில் தனியாக இருந்த பெண் உயிரிழந்த வழக்கில், மருத்துவா் கைது செய்யப்பட்டாா். திருச்சிராப்பள்ளியைச் சோ்ந்தவா் நித்யா (26). நித்யாவும், கொடுங்கையூா் வெங்கடேஷ்வரா காலனி 6-ஆவது த... மேலும் பார்க்க

இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கும் மாணவருக்கு நம்மாழ்வாா் விருது: ஆளுநா் ஆா்.என்.ரவி அறிவிப்பு

இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கும் வேளாண் மாணவருக்கு ஆண்டுதோறும் தங்கப் பதக்கத்துடன் கூடிய நம்மாழ்வாா் விருது ஆளுநா் மாளிகை சாா்பில் சுற்றுச்சூழல் தின விழாவில் வழங்கப்படும் என ஆளுநா் ஆா்.என்.ரவி அற... மேலும் பார்க்க