செய்திகள் :

கிளாம்பாக்கத்திலிருந்து 6 லட்சம் பேர் பயணம்! நேற்று மட்டும்?

post image

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து ஜூன் 4ஆம் தேதி முதல் இன்று அதிகாலை வரை 11 ஆயிரம் பேருந்துகளில் சுமார் 6.06 லட்சம் பேர் வெளியூர்களுக்குச் சென்றுள்ளனர் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை முகூர்த்த நாள், சனிக்கிழமை பக்ரீத் பண்டிகை மற்றும் வார விடுமுறை நாள்கள் என்பதால், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

சனிக்கிழமை பக்ரீத் பண்டிகைக் கொண்டாடப்பட்டதால், வியாழக்கிழமை இரவு முதலே ஏராளமானோர் சென்னையிலிருந்து வெளியூர்களுக்குச் செல்ல தொடங்கியிருந்தனர்.

இதையும் படிக்க.. சொல்லப் போனால்... திட்டமிடப்படாத நெரிசல் கொலைகள்!

அந்த வகையில், ஜூன் 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதி அதிகாலை வரை சென்னையிலிருந்து இயக்கப்பட்ட 11,026 பேருந்துகளில் 6,06,430 பேர் பயணம் செய்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து 1.66 லட்சம் பேர் வெளியூர்களுக்குச் சென்றுள்ளனர் என்று அரசுப் போக்குவரத்துக் கழகம் கூறியுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஏராளமானோர் வெளியூர் சென்ற நிலையில், 4ஆம் தேதி முதல் பேருந்து முனையம் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மீனாட்சியம்மன் கோயிலில் அமித் ஷா சுவாமி தரிசனம்!

மதுரையில் இன்று நடைபெறும் பாஜக நிா்வாகிகளுடான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.மதுரை மீனாட்சியம்மன் கோய... மேலும் பார்க்க

ஓரிரு வாரங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: மா. சுப்பிரமணியன்

சென்னை: தமிழகம் முழுவதும் இன்னும் ஓரிரு வாரங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.மக்களுக்கு இலவசமாக உடல் பரிசோதன... மேலும் பார்க்க

அதிமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக! எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

அதிமுகவின் திட்டங்களை திமுக முடக்கிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.அரக்கோணம் எம்எல்ஏ ரவியின் இல்லத் திருமண விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். தொடர்ந்து... மேலும் பார்க்க

அமித் ஷா வருகை: மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்குக் கட்டுப்பாடு!

மதுரை: மதுரை வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சற்று நேரத்தில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தர இருப்பதால், பக்தர்களுக்குக் கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ளது.முகூர்த்த தினம் என்பதால்... மேலும் பார்க்க

கர்நாடகம்: தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளி பலி; உடலை எரிக்க முயற்சித்த குவாரி உரிமையாளர்கள் கைது

கர்நாடகத்தில் கல் குவாரியில் மண், பாறைகள் சரிந்து விழுந்ததில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளி பலியானார்.கர்நாடக மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்தில் துமகேரே கிராமத்தில் கல் குவாரியில், வெள்ளிக்கிழமையில் தொழிலா... மேலும் பார்க்க

பெண் உயிரிழந்த வழக்கில் திருப்பம்: கைதான மருத்துவா் பரபரப்பு வாக்குமூலம்!

சென்னை கொடுங்கையூரில் வீட்டில் தனியாக இருந்த பெண் உயிரிழந்த வழக்கில், மருத்துவா் கைது செய்யப்பட்டாா். திருச்சிராப்பள்ளியைச் சோ்ந்தவா் நித்யா (26). நித்யாவும், கொடுங்கையூா் வெங்கடேஷ்வரா காலனி 6-ஆவது த... மேலும் பார்க்க