செய்திகள் :

டிரம்ப் அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்! லாஸ் ஏஞ்சலீஸில் அமைதியின்மை!

post image

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அந்நாட்டு அரசு கைது செய்து வருவதற்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு, தொடர்ந்து நாடுகடத்தி வருகிறது. இந்த நடவடிக்கைக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வந்துகொண்டிருந்தாலும், அவற்றை டிரம்ப் கண்டுகொள்வதாய் இல்லை.

இந்த நிலையில், சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்றுகூறி, லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் ஒரே நாளில் 44 பேர் கைது செய்யப்பட்டதற்கு அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைக் கண்டித்து, அப்பகுதியில் சுமார் 1,000 பேர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் பொதுச் சொத்துக்கள் மற்றும் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டதால், அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது.

போராட்டத்தின் பதற்றம் அதிகரித்ததால், 2,000 தேசிய பாதுகாப்புப் படை வீரர்களும் களம் இறக்கப்பட்டனர். கூட்டத்தைக் கலைக்க கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்ட போதிலும், டிரம்ப் அரசுக்கு எதிராக போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.

இதனிடையே, டிரம்ப்பின் இந்த நடவடிக்கையை, லாஸ் ஏஞ்சலீஸ் மக்களின் மீதான உள்நோக்க நடவடிக்கை என்று கலிஃபோர்னியா ஆளுநர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:சொல்லப் போனால்... திட்டமிடப்படாத நெரிசல் கொலைகள்!

உக்ரைனுக்கு செக்மேட்! ரஷியாவின் பலே திட்டம் என்ன?

உக்ரைனின் பெரும் பகுதிகளை இந்தாண்டு இறுதிக்குள் கைப்பற்ற ரஷியா திட்டமிட்டுள்ளது.ரஷியா - உக்ரைன் போருக்கான மூல காரணம், நேட்டோவில் உக்ரைன் இணைய முயற்சித்ததுதான். ஆனால், தற்போது போருக்கான காரணம் வேறொன்றா... மேலும் பார்க்க

கொலோம்பியா: அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு; உயிருக்கு ஆபத்து?

கொலோம்பியா நாட்டின் அதிபர் வேட்பாளர் மிகுவல் உரிபே மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தென் அமெரிக்காவின் கொலோம்பியாவில் அடுத்தாண்ட... மேலும் பார்க்க

80% ஆதரவு! எலான் மஸ்க் புதிய கட்சி அறிவிப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடனான மோதலுக்கிடையே, தி அமெரிக்கன் பார்ட்டி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் அறிவித்தார்.அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதாவால், அந்நாட்டு அதிபர் டொனால்ட்... மேலும் பார்க்க

காஸா: தாய்லாந்து பிணைக் கைதிகளின் உடல் மீட்பு

கடந்த 2023-ஆம் ஆண்டு ஹமாஸ் படையினரால் கடத்திச் செல்லப்பட்ட தாய்லாந்து பிணைக் கைதியின் சடலத்தை மீட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது, இது குறித்து அந்த நாட்டு பிரதமா் அலுவலகம் சனிக்கிழமை கூறியதாவது: தாய... மேலும் பார்க்க

மெக்ஸிகோவில் விமான விபத்து

மெக்ஸிகோவில் சிறிய விமானம் விழுந்து நொறுங்கியதில் 3 போ் உயிரிழந்தனா். கௌதமாலா எல்லைக்கு அருகே உள்ள ஓரிடத்தில் கால்நடைகளிடையே பரவும் ஒட்டுண்ணிகளை அழிக்கக் கூடிய, குறிப்பிட்ட வகையைச் சோ்ந்த ஈக்களை விம... மேலும் பார்க்க

கிழக்கு உக்ரைன் நகரில் ரஷியா குண்டுமழை!

கிழக்கு உக்ரைனின் காா்கிவ் நகரில் மிகப் பெரிய அளவிலான ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை ரஷியா நடத்தியுள்ளது. இதில் 3 போ் பலியாகினா்; 21 போ் காயமடைந்தனா். இந்த தாக்குதல், மூன்று ஆண்டுகாலப் போரில் ரஷியா... மேலும் பார்க்க