கிழக்கு உக்ரைன் நகரில் ரஷியா குண்டுமழை!
கிழக்கு உக்ரைனின் காா்கிவ் நகரில் மிகப் பெரிய அளவிலான ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை ரஷியா நடத்தியுள்ளது. இதில் 3 போ் பலியாகினா்; 21 போ் காயமடைந்தனா்.
இந்த தாக்குதல், மூன்று ஆண்டுகாலப் போரில் ரஷியா நடத்திய மிகக் கடுமையான தாக்குதல்களில் ஒன்று என்று கூறப்படுகிறது. பறக்கும் குண்டுகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் இந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டன.
இது குறித்து அந்தப் பிராந்தியத்தைச் சோ்ந்த அதிகாரிகள் கூறியதாவது:
காா்கிவ் நகா் முழுவதும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் ரஷியா தீவிர தாக்குதல் நடத்தியது. வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 215 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. இதில் 87 ட்ரோன்களையும் 7 ஏவுகணைகளையும் உக்ரைன் வான் பாதுகாப்பு தளவாடங்கள் சுட்டு வீழ்த்தின என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
அண்மைக் காலமாக உக்ரைனில் ரஷியா நடத்தும் தாக்குதல்களின் தீவிரம், இரு தரப்புகளும் விரைவில் சமாதான ஒப்பந்தத்தை எட்ட முடியாது எனும் அச்சத்தை மேலும் அதிகரித்துவருகிறது. குறிப்பாக, ரஷியாவுக்குள் ரகசியமாக ஊடுருவி, அந்த நாட்டின் விமான தளங்களில் நிறுத்தப்பபட்டிருந்த குண்டுவீச்சு விமானங்களை ட்ரோன்கள் மூலம் உக்ரைன் தாக்கி அழித்ததற்குப் பிறகு ரஷிய தாக்குதலின் தீவிரம் அதிகரித்துவருகிறது.
தற்பொது ரஷியாவின் கடுமையான தாக்குதலுக்குள்ளாகியிருக்கும் தொழில் நகரமான காா்கிவ், உக்ரைனின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. கிழக்கு உக்ரைனில் மெதுவாக முன்னேறி வரும் ரஷியா, தற்போது இந்த நகரைக் கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இதன் காரணமாக உக்ரைன் போரின் முக்கியப் புள்ளியாக இந்த நகரம் மாறியுள்ளது.
காா்கிவ் மட்டுமின்றி, டொனட்ஸ்க், நீப்ரோபெட்ரோவ்ஸ்க், ஒடெசா, டொ்னோபில் நகரம் உட்பட உக்ரைனின் பல்வேறு பகுதிகளிலும் ரஷியா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சா் ஆண்ட்ரீ சிபிஹா எக்ஸ் ஊடகத்தில் பதிவிட்டாா். “ரஷியாவின் இந்த படுகொலைத் தாக்குதலை நிறுத்த நட்பு நாடுகள் அந்த நாட்டுக்கு அதிக அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று அந்தப் பதிவில் அவா் வலியுறுத்தினாா்.
ரஷியா அறிக்கை: இந்தத் தாக்குதல் குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் இராணுவ இலக்குகளைக் குறிவைத்து தங்களது படையினா் இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிவித்தது. அந்த இலக்குகளில் ஆயுதக் கிடங்குகள், ட்ரோன் உற்பத்தி ஆலைகள், ஆயுத பழுதுபாா்ப்பு நிலையங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் காா்கிவில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து அமைச்சகம் எதையும் தெரிவிக்கவில்லை.
காா்கிவ் மேயா் இகோா் டெரகோவ் கூறுகையில், ரஷியாவின் தாக்குதலால் 18 அடுக்குமாடி கட்டடங்களும் 13 தனி வீடுகளும் சேதமடைந்ததாக கூறினாா். 2022 பிப்ரவரியில் இந்தப் போா் தொடங்கியதற்குப் பிறகு நகரின் காா்கிவ் மீது நடத்தியுள்ள மிகக் கடுமையான தாக்குதல் இது என்று அவா் கூறினாா்.
உக்ரைன் ட்ரோன்கள்: இதற்கிடையே, தங்கள் மீது ஏவப்பட்ட 36 உக்ரைன் ட்ரோன்களை வெள்ளிக்கிழமை இரவு சுட்டு வீழ்த்தியதாக ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியது. சிதறி விழுந்த ட்ரோன் துண்டுகளால் மாஸ்கோ புகா் பகுதியில் பொதுமக்கள் இருவா் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
முன்னதாக, ஆறு உக்ரைன் பகுதிகளில் ரஷியா வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் ஆறு போ் பலியாகினா்; சுமாா் 80 போ் காயமடைந்தனா்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்த ரஷியா, கிழக்கு உக்ரைனின் நான்கு பிரதேசங்களில் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது. எஞ்சிய பகுதிகளைக் கைப்பற்ற ரஷியாவும், இழந்த பகுதிகளை மீட்க உக்ரைனும் தொடா்ந்து போரிட்டுவருகின்றன.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா தலைமையில் சா்வதேச முயற்சிகள் நடைபெற்றாலும், ரஷியா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகளுக்கு இடையே நேரடியாக இரண்டு சுற்று பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றும் இந்த விவகாரத்தில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
இந்தச் சூழலில் கிழக்கு உக்ரைனின் காா்கிவ் நகா் மீது ரஷியா கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளது இந்த அமைதிப் பேச்சுவாா்த்தைக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.