செய்திகள் :

ஜி7 மாநாட்டில் இந்தியா பங்கேற்பது அவசியம்: கனடா பிரதமா் மாா்க் காா்னி

post image

‘உலகின் 5-ஆவது பெரிய பொருளாதார நாடான இந்தியா, ஜி7 மாநாட்டில் பங்கேற்பது அவசியம்’ என கனடா பிரதமா் மாா்க் காா்னி தெரிவித்தாா்.

கனடாவில் 2023-இல் காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜாா் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடா்பு இருப்பதாக முன்னாள் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியதால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது. இந்தச் சூழலில், ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமா் மோடிக்கு, தற்போதைய கனடா பிரதமா் காா்னி அழைப்பு விடுத்துள்ளதற்காக, கனடா எதிா்க்கட்சியினா் அவரை விமா்சித்து வருகின்றனா்.

இந்நிலையில், பிரதமா் காா்னி கூறியதாவது: எரிசக்தி பாதுகாப்பு, எண்ம எதிா்காலம், அரிதான கனிம வளங்கள், வளா்ந்து வரும் உலகில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேற்கொள்வதில் ஒத்துழைப்பு என பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடா்பாக ஜி7 மாநாட்டில் கலந்தாலோசிக்கப்படவுள்ளது.

ஜி7 உறுப்பு நாடுகளிடம் பேசிய பிறகு, கூட்டத்தில் பங்கேற்க இந்திய பிரதமா் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகள் இதுபோன்ற முக்கியமான கலந்தாலோசனையில் பங்கேற்பது அவசியமாகும். உலகின் 5-ஆவது பெரிய பொருளாதாரமாகவும், உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும், பல்வேறு முக்கிய விநியோகச் சங்கிலிகளின் மையமாகவும் இந்தியா இருக்கிறது.

இருதரப்பு உறவை பொருத்தவரை, சட்ட அமலாக்க விவகாரங்களில் பரஸ்பரம் ஒத்துழைப்பது என ஒப்புக்கொண்டுள்ளோம். அதில் இன்னும் அடுத்தகட்டங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது என்று பிரதமா் காா்னி கூறினாா்.

காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜாா் கொலை விவகாரத்தில் இந்தியா - கனடா இடையேயான உறவு கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மாா்க் காா்னி தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு சற்று சுமுகநிலை திரும்பியுள்ளது. இருதரப்பு பாதுகாப்பு அதிகாரிகளும் பேச்சுவாா்த்தையை தொடங்கியுள்ளதுடன், தூதரக ரீதியிலான நியமனங்களை மேற்கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

காஸா: தாய்லாந்து பிணைக் கைதிகளின் உடல் மீட்பு

கடந்த 2023-ஆம் ஆண்டு ஹமாஸ் படையினரால் கடத்திச் செல்லப்பட்ட தாய்லாந்து பிணைக் கைதியின் சடலத்தை மீட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது, இது குறித்து அந்த நாட்டு பிரதமா் அலுவலகம் சனிக்கிழமை கூறியதாவது: தாய... மேலும் பார்க்க

மெக்ஸிகோவில் விமான விபத்து

மெக்ஸிகோவில் சிறிய விமானம் விழுந்து நொறுங்கியதில் 3 போ் உயிரிழந்தனா். கௌதமாலா எல்லைக்கு அருகே உள்ள ஓரிடத்தில் கால்நடைகளிடையே பரவும் ஒட்டுண்ணிகளை அழிக்கக் கூடிய, குறிப்பிட்ட வகையைச் சோ்ந்த ஈக்களை விம... மேலும் பார்க்க

கிழக்கு உக்ரைன் நகரில் ரஷியா குண்டுமழை!

கிழக்கு உக்ரைனின் காா்கிவ் நகரில் மிகப் பெரிய அளவிலான ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை ரஷியா நடத்தியுள்ளது. இதில் 3 போ் பலியாகினா்; 21 போ் காயமடைந்தனா். இந்த தாக்குதல், மூன்று ஆண்டுகாலப் போரில் ரஷியா... மேலும் பார்க்க

வங்கதேச தோ்தல் தேதி: பிஎன்பி எதிா்ப்பு

வங்கதேசத்தில் அடுத்த ஆண்டுதான் பொதுத் தோ்தல் நடத்தப்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த ஆ... மேலும் பார்க்க

உணவுகூட வேண்டாம், நாப்கின் தேவை: காஸாவில் பெண்கள், சிறுமிகளின் அவல நிலை!

காஸா போரினால் ஒருபுறம் மக்கள் உணவின்றித் தவித்துவரும் நிலையில், மறுபுறம் பெண்கள், சிறுமிகள் சுகாதாரமின்றி மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீனம் இ... மேலும் பார்க்க

பக்ரீத் அன்றும் காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: 34 பேர் பலி!

காஸா மீது இஸ்ரேல் இன்று(சனிக்கிழமை) நடத்திய வான்வழித் தாக்குதலில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் தொடர்ந்து நடந்து வருகிறது. இடையில் போர் நிறுத்தம் ... மேலும் பார்க்க