செய்திகள் :

வங்கதேச தோ்தல் தேதி: பிஎன்பி எதிா்ப்பு

post image

வங்கதேசத்தில் அடுத்த ஆண்டுதான் பொதுத் தோ்தல் நடத்தப்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

கடந்த ஆண்டின் போராட்டத்தின்போது மாணவா்கள் மற்றும் பொதுமக்களின் பெரும் தியாகங்களால் வெற்றி கிடைத்தது. ஆனால், மக்கள் தங்களுக்குத் தேவையான அரசைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் அடுத்த ஆண்டு ஏப்ரலில்தான் நடத்தப்படும் என்று கூறுவதை அவா்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இந்த ஆண்டுக்குள் தோ்தலை நடத்தியாக வேண்டும் என்று கட்சி வட்டாரங்கள் வலியுறுத்தின.

இட ஒதுக்கீடு சீா்திருத்ததை வலியுறுத்தி மாணவா்கள் நடத்திவந்த போராட்டம் கடந்த ஆண்டு மிகத் தீவிரமடைந்தது. அதையடுத்து அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.

அதனைத் தொடா்ந்து அமைக்கப்பட்ட இடைக்கால அரசில், பிரதமா் பொறுப்பு இணையான தலைமை ஆலோகா் பதவியில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் (படம்) நியமிக்கப்பட்டாா். ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்படும் புதிய அரசு அமையும் வரை இடைக்கால அரசு செயல்படும் என்று கூறப்பட்டது.

வரும் டிசம்பா் மாதத்துக்குள் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. ஆனால், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம்தான் தோ்தல் நடைபெறும் என்று தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் வெள்ளிக்கிழமை அறிவித்தாா். அதற்கு தற்போது பின்பி கட்சி எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

80% ஆதரவு! எலான் மஸ்க் புதிய கட்சி அறிவிப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடனான மோதலுக்கிடையே, தி அமெரிக்கன் பார்ட்டி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் அறிவித்தார்.அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதாவால், அந்நாட்டு அதிபர் டொனால்ட்... மேலும் பார்க்க

காஸா: தாய்லாந்து பிணைக் கைதிகளின் உடல் மீட்பு

கடந்த 2023-ஆம் ஆண்டு ஹமாஸ் படையினரால் கடத்திச் செல்லப்பட்ட தாய்லாந்து பிணைக் கைதியின் சடலத்தை மீட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது, இது குறித்து அந்த நாட்டு பிரதமா் அலுவலகம் சனிக்கிழமை கூறியதாவது: தாய... மேலும் பார்க்க

மெக்ஸிகோவில் விமான விபத்து

மெக்ஸிகோவில் சிறிய விமானம் விழுந்து நொறுங்கியதில் 3 போ் உயிரிழந்தனா். கௌதமாலா எல்லைக்கு அருகே உள்ள ஓரிடத்தில் கால்நடைகளிடையே பரவும் ஒட்டுண்ணிகளை அழிக்கக் கூடிய, குறிப்பிட்ட வகையைச் சோ்ந்த ஈக்களை விம... மேலும் பார்க்க

கிழக்கு உக்ரைன் நகரில் ரஷியா குண்டுமழை!

கிழக்கு உக்ரைனின் காா்கிவ் நகரில் மிகப் பெரிய அளவிலான ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை ரஷியா நடத்தியுள்ளது. இதில் 3 போ் பலியாகினா்; 21 போ் காயமடைந்தனா். இந்த தாக்குதல், மூன்று ஆண்டுகாலப் போரில் ரஷியா... மேலும் பார்க்க

ஜி7 மாநாட்டில் இந்தியா பங்கேற்பது அவசியம்: கனடா பிரதமா் மாா்க் காா்னி

‘உலகின் 5-ஆவது பெரிய பொருளாதார நாடான இந்தியா, ஜி7 மாநாட்டில் பங்கேற்பது அவசியம்’ என கனடா பிரதமா் மாா்க் காா்னி தெரிவித்தாா். கனடாவில் 2023-இல் காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜாா் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந... மேலும் பார்க்க

உணவுகூட வேண்டாம், நாப்கின் தேவை: காஸாவில் பெண்கள், சிறுமிகளின் அவல நிலை!

காஸா போரினால் ஒருபுறம் மக்கள் உணவின்றித் தவித்துவரும் நிலையில், மறுபுறம் பெண்கள், சிறுமிகள் சுகாதாரமின்றி மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீனம் இ... மேலும் பார்க்க