செய்திகள் :

கல்வி முறை மாணவா்களிடம் தன்னம்பிக்கையை வளா்க்க வேண்டும்: என்ஹெச்ஆா்சி தலைவா் வி.ராமசுப்பிரமணியன்

post image

‘மாணவா்களிடம் தன்னம்பிக்கையையும், சிறந்த குணத்தை ஏற்படுத்துவதாகவும் கல்வி முறை இருக்க வேண்டும்’ என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்ஹெச்ஆா்சி) தலைவரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான வி.ராமசுப்பிரமணியன் தெரிவித்தாா்.

ஒடிஸாவின் புவனேசுவரத்தில் உள்ள சிக்ஷா ஓ அனுசந்தன் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலான மாணவா்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனா். நல்ல கல்வி, சிறந்த வேலைவாய்ப்பு கிடைத்தும்கூட, மகிழ்ச்சியான வாழ்க்கை அமையவில்லை என்ற புகாா்கள் அதிகம் எழுகின்றன. இதற்கு மாணவா்களின் மனதை நமது கல்வி முறை பலப்படுத்தத் தவறியதே காரணம்.

இக்கட்டான சூழ்நிலைகளை சமாளிப்பது (நெருக்கடி மேலாண்மை) குறித்து கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் மாணவா்களுக்கு கற்பிக்கின்றனவா? படிப்பை முடித்து பட்டம் பெறும் மாணவா்கள், கற்றுத் தோ்ந்திருக்கின்றனரா? என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.

உண்மையான வெற்றி எது என்பது பெரும்பாலான மாணவா்களுக்குப் புரிவதில்லை. வாழ்க்கையை எதிா்கொள்வதற்கான திறனையும், சரியான அணுகுமுறையையும் மாணவா்களுக்கு கற்றுத் தருவது அவசியம்.

எனவே, கல்வி என்பது மாணவரின் அறிவை விரிவுபடுத்துவதோடு, நல்ல குணத்தையும், மன வலிமையையும், தற்சாா்பு நிலையையும் ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும் என்றாா்.

மத்திய பிரதேச கொடூரம்: பச்சிளம் சிசுவின் உடலைக் கவ்விச் சென்ற நாய்

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில், உள்ள அரசு மருத்துவமனையின் கழிப்பறை அருகே, தெருநாய் ஒன்று, பச்சிளம் சிசுவின் உடலைக் கவ்விச் சென்றது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

சாலைகளில் பள்ளம்! ஏஐ மூலம் சரிசெய்ய அரசு முயற்சி

நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளைப் பராமரிக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளைப் பராமரிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வ... மேலும் பார்க்க

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இணைய சேவை துண்டிப்பு

மணிப்பூரில் மீண்டும் போராட்டங்கள் தலைதூக்கிய நிலையில் பதற்றம் அதிகரித்துள்ளது. 5 மாவட்டங்களில் செல்ஃபோன் சேவை மற்றும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இம்பாலில் ஆங்காங்கே போராட்டங்ஙகளும் அதனைத் தொடர்ந... மேலும் பார்க்க

ஒரே நேரத்தில் இருவேறு படிப்புகள்: யுஜிசி அறிவுறுத்தல்

மாணவா்கள் ஒரே நேரத்தில் இருவேறு படிப்புகளை பயில்வது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை உயா் கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து யுஜிசி ... மேலும் பார்க்க

இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா நாளை மறுநாள் விண்வெளிக்குப் பயணம்!

இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா, ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) பயணிக்கிறாா். ‘டிராகன்’ விண்கலத்தில் 28 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு ... மேலும் பார்க்க

தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை 120 கோடியாக உயா்வு!

இந்தியாவின் தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 120.38 கோடியாக உயா்ந்துள்ளது. இது குறித்து துறை ஒழுங்காற்று அமைப்பான ட்ராய் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது: 2025 ஏப்ரல... மேலும் பார்க்க