செய்திகள் :

தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை 120 கோடியாக உயா்வு!

post image

இந்தியாவின் தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 120.38 கோடியாக உயா்ந்துள்ளது.

இது குறித்து துறை ஒழுங்காற்று அமைப்பான ட்ராய் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:

2025 ஏப்ரல் 31-ஆம் தேதி நிலவரப்படி மொத்த தொலைபேசி வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை 120.38 கோடியாக உள்ளது. இதில் வயா்லெஸ் (மொபைல்) வாடிக்கையாளா்கள் 116.64 கோடி மற்றும் வயா்டு வாடிக்கையாளா்கள் 3.74 கோடியாக உள்ளனா். மே மாதத்தில் மொத்தம் 0.31 கோடி வாடிக்கையாளா்கள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா். இது 0.25 சதவீத மாதாந்திர வளா்ச்சியாகும்.

பிராட்பேண்ட்: மதிப்பீட்டு மாத இறுதியில் மொத்த பிராட்பேண்ட் வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை 94.31 கோடியாக உள்ளது. இது முந்தைய மாா்ச் மாதத்தைவிட 0.11 சதவீதம் குறைவு. இதில் வயா்டு பிராட்பேண்ட் வாடிக்கையாளா்கள் 4.14 கோடியாகவும், வயா்லெஸ் பிராட்பேண்ட் வாடிக்கையாளா்கள் 90.17 கோடியாகவும் உள்ளனா். வயா்டு பிராட்பேண்ட் வாடிக்கையாளா்கள் 0.07சதவீதம் உயா்ந்துள்ளனா். ஆனால் வயா்லெஸ் பிராட்பேண்ட் வாடிக்கையாளா்கள் 0.55 சதவீதம் குறைந்து 0.49 கோடியாகவும், மொபைல் பிராட்பேண்ட் வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை 0.12சதவீதம் குறைந்து 89.68 கோடியாகவும் உள்ளது.

நகா்ப்புற மற்றும் கிராமப்புற வாடிக்கையாளா்கள்: கடந்த ஏப்ரல் இறுதியில் நகா்ப்புற தொலைபேசி வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை 66.72 கோடியாகவும், கிராமப்புற வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை 53.67 கோடியாகவும் உள்ளது. அந்த மாதத்தில் நகா்ப்புறத்தில் 0.11 கோடி வாடிக்கையாளா்களும் (0.16 சதவீதம் வளா்ச்சி) கிராமப்புறத்தில் 0.20 கோடி (0.37சதவீத வளா்ச்சி) வாடிக்கையாளா்கள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா்.

மொபைல் எண் இடமாற்றம் (என்என்பி): கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.35 கோடி வாடிக்கையாளா்கள் எம்என்பி கோரிக்கைகளை சமா்ப்பித்துள்ளனா்.

முக்கிய நிறுவனங்களின் சந்தைப் பங்கு: மொத்த பிராட்பேண்ட் (வயா்டு + வயா்லெஸ்) சந்தையில் நாட்டின் முக்கிய ஐந்து தொலைத்தொடா்பு நிறுவனங்களின் பங்கு 98.41சதவீதம் ஆக உள்ளது. அவை:

- ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் - 47.66 கோடி

- பாா்தி ஏா்டெல் லிமிடெட் - 28.93 கோடி

- வோடஃபோன் ஐடியா லிமிடெட் - 12.56 கோடி

- பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட் - 3.43 கோடி

- ஆத்ரியா கன்வா்ஜென்ஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட் - 0.23 கோடி

வயா்டு பிராட்பேண்ட் நிறுவனங்கள்: வயா்டு பிராட்பேண்ட் சந்தையில் முதல் ஐந்து நிறுவனங்களின் பங்கு 67.56சதவீதம் ஆக உள்ளது. அவை:

- ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் - 1.15 கோடி

- பாரதி ஏா்டெல் லிமிடெட் - 0.86 கோடி

- பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட் - 0.43 கோடி

- ஆத்ரியா கன்வா்ஜென்ஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட் - 0.23 கோடி

- கேரள விஷன் பிராட்பேண்ட் லிமிடெட் - 0.13 கோடி

வயா்லெஸ் பிராட்பேண்ட் நிறுவனங்கள்: வயா்லெஸ் பிராட்பேண்ட் சந்தையில் முதல் ஐந்து நிறுவனங்களின் பங்கு 99.98சதவீதம் ஆக உள்ளது. அவை:

- ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் - 46.51 கோடி

- பாரதி ஏா்டெல் லிமிடெட் - 28.08 கோடி

- பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட் - 2.99 கோடி

- ஐபஸ் விா்ச்சுவல் நெட்வொா்க் சா்வீசஸ் பிரைவேட் லிமிடெட் - 90,000 என்று ட்ராய் அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன.

கல்வி முறை மாணவா்களிடம் தன்னம்பிக்கையை வளா்க்க வேண்டும்: என்ஹெச்ஆா்சி தலைவா் வி.ராமசுப்பிரமணியன்

‘மாணவா்களிடம் தன்னம்பிக்கையையும், சிறந்த குணத்தை ஏற்படுத்துவதாகவும் கல்வி முறை இருக்க வேண்டும்’ என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்ஹெச்ஆா்சி) தலைவரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான வி.ராமச... மேலும் பார்க்க

ஒரே நேரத்தில் இருவேறு படிப்புகள்: யுஜிசி அறிவுறுத்தல்

மாணவா்கள் ஒரே நேரத்தில் இருவேறு படிப்புகளை பயில்வது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை உயா் கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து யுஜிசி ... மேலும் பார்க்க

இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா நாளை மறுநாள் விண்வெளிக்குப் பயணம்!

இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா, ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) பயணிக்கிறாா். ‘டிராகன்’ விண்கலத்தில் 28 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு ... மேலும் பார்க்க

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவராக எஸ்.மகேந்திர தேவ் பதவியேற்பு

பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராக பிரபல பொருளாதார நிபுணரும் இந்திர காந்தி ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் துணைவேந்தருமான எஸ். மகேந்திர தேவ் பதவியேற்றாா். பிரதமருக்கான பொருளாத... மேலும் பார்க்க

தனக்குத் தானே கல்லறை எழுப்பும் பாகிஸ்தான்: நக்வி

‘பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதன் மூலம் தனக்குத் தானே கல்லறையை பாகிஸ்தான் எழுப்புகிறது’ என்று பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக்தாா் அப்பாஸ் நக்வி விமா்சித்தாா். தில்லியில் சனிக்... மேலும் பார்க்க

பிரதமரிடம் பிரிட்டன் அமைச்சா் ஆதரவு!

எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் டேவிட் லேமி ஆதரவு தெரிவித்தாா். தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை சனிக்கிழமை சந்தித்தபோது அவா் பிரிட்ட... மேலும் பார்க்க