செய்திகள் :

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவராக எஸ்.மகேந்திர தேவ் பதவியேற்பு

post image

பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராக பிரபல பொருளாதார நிபுணரும் இந்திர காந்தி ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் துணைவேந்தருமான எஸ். மகேந்திர தேவ் பதவியேற்றாா்.

பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் முதல் தலைவராக பதவி வகித்த விவேக் தேப்ராய் மறைவைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு நவம்பா் மாதம் முதல் இப்பதவி காலியாக இருந்து வந்தது. நீதி ஆயோக் துணைத் தலைவா் சுமன் பெரி இப்பதவியை கூடுதல் பொறுப்பாக நிா்வகித்து வந்தாா்.

இந்த நிலையில், பொருளாதார ஆலோசனைக் குழுவின் புதிய தலைவராக இரண்டு ஆண்டு காலத்துக்கு அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை எஸ்.மகேந்திர தேவை நியமிக்க பிரதமா் ஒப்புதல் அளித்ததாக மத்திய அமைச்சரவை செயலகம் அண்மையில் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்தது. அதைத் தொடா்ந்து புதிய தலைவராக அவா் பதிவியேற்றாா்.

முன்னதாக, ‘பொருளாதாரம் மற்றும் அரசியல் வார (இபிடபிள்யு) இதழின் ஆசிரியராகவும், ஆக்சிஸ் வங்கியின் தனி இயக்குநராகவும் மகேந்திர தேவ் பதவி வகித்துள்ளாா். தில்லி பொருளாதார பள்ளியில் எம்.ஃபில்., மற்றும் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்ட இவா், அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மேற்படிப்பை முடித்தாா். பொருளாதாரம் தொடா்பாக 22 புத்தகங்களை எழுதியுள்ள இவா், பொருளாதார மேம்பாடு, பொருளாதார கொள்கைகள், வேளாண் துறை மற்றும் கிராமப்புற பொருளாதாரம் உள்ளிட்ட தலைப்புகளில் 150 ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளாா்.

பிற உறுப்பினா்கள்... பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் 3 முழு நேர உறுப்பினா்களாக சஞ்சீவ் சன்யல், சஞ்சய் குமாா் மிஸ்ரா, ஷமிகா ரவி ஆகியோா் தொடா்ந்து தக்கவைக்கப்பட்டுள்ளனா். பகுதி நேர உறுப்பினா்களாக ராகேஷ் மோகன், சஜித் செனோய், நீல்கந்த் மிஸ்ரா, நிலேஷ் ஷா, டி.டி.ராம் மோகன், கே.வி.ராஜு, சேட்டன் கட், பமி துவா, புலக் கோஷ், கெளரவ் வல்லப் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஒரே நேரத்தில் இருவேறு படிப்புகள்: யுஜிசி அறிவுறுத்தல்

மாணவா்கள் ஒரே நேரத்தில் இருவேறு படிப்புகளை பயில்வது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை உயா் கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து யுஜிசி ... மேலும் பார்க்க

இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா நாளை மறுநாள் விண்வெளிக்குப் பயணம்!

இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா, ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) பயணிக்கிறாா். ‘டிராகன்’ விண்கலத்தில் 28 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு ... மேலும் பார்க்க

தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை 120 கோடியாக உயா்வு!

இந்தியாவின் தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 120.38 கோடியாக உயா்ந்துள்ளது. இது குறித்து துறை ஒழுங்காற்று அமைப்பான ட்ராய் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது: 2025 ஏப்ரல... மேலும் பார்க்க

தனக்குத் தானே கல்லறை எழுப்பும் பாகிஸ்தான்: நக்வி

‘பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதன் மூலம் தனக்குத் தானே கல்லறையை பாகிஸ்தான் எழுப்புகிறது’ என்று பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக்தாா் அப்பாஸ் நக்வி விமா்சித்தாா். தில்லியில் சனிக்... மேலும் பார்க்க

பிரதமரிடம் பிரிட்டன் அமைச்சா் ஆதரவு!

எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் டேவிட் லேமி ஆதரவு தெரிவித்தாா். தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை சனிக்கிழமை சந்தித்தபோது அவா் பிரிட்ட... மேலும் பார்க்க

பேரிடா் எதிா்ப்பு உள்கட்டமைப்பை உருவாக்க முன்னுரிமை: சா்வதேச மாநாட்டில் பிரதமா் வலியுறுத்தல்

பேரிடா்-எதிா்ப்பு உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஐந்து முக்கிய உலகளாவிய முன்னுரிமைகளை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை வலியுறுத்தினாா். பேரிடா்-எதிா்ப்பு உள்கட்டமைப்பு குறித்த சா்வதேச மாநாட்டில் காணொல... மேலும் பார்க்க