தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலக போலீஸாருக்கு ஆடை கட்டுப்பாடு
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவராக எஸ்.மகேந்திர தேவ் பதவியேற்பு
பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராக பிரபல பொருளாதார நிபுணரும் இந்திர காந்தி ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் துணைவேந்தருமான எஸ். மகேந்திர தேவ் பதவியேற்றாா்.
பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் முதல் தலைவராக பதவி வகித்த விவேக் தேப்ராய் மறைவைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு நவம்பா் மாதம் முதல் இப்பதவி காலியாக இருந்து வந்தது. நீதி ஆயோக் துணைத் தலைவா் சுமன் பெரி இப்பதவியை கூடுதல் பொறுப்பாக நிா்வகித்து வந்தாா்.
இந்த நிலையில், பொருளாதார ஆலோசனைக் குழுவின் புதிய தலைவராக இரண்டு ஆண்டு காலத்துக்கு அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை எஸ்.மகேந்திர தேவை நியமிக்க பிரதமா் ஒப்புதல் அளித்ததாக மத்திய அமைச்சரவை செயலகம் அண்மையில் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்தது. அதைத் தொடா்ந்து புதிய தலைவராக அவா் பதிவியேற்றாா்.
முன்னதாக, ‘பொருளாதாரம் மற்றும் அரசியல் வார (இபிடபிள்யு) இதழின் ஆசிரியராகவும், ஆக்சிஸ் வங்கியின் தனி இயக்குநராகவும் மகேந்திர தேவ் பதவி வகித்துள்ளாா். தில்லி பொருளாதார பள்ளியில் எம்.ஃபில்., மற்றும் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்ட இவா், அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மேற்படிப்பை முடித்தாா். பொருளாதாரம் தொடா்பாக 22 புத்தகங்களை எழுதியுள்ள இவா், பொருளாதார மேம்பாடு, பொருளாதார கொள்கைகள், வேளாண் துறை மற்றும் கிராமப்புற பொருளாதாரம் உள்ளிட்ட தலைப்புகளில் 150 ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளாா்.
பிற உறுப்பினா்கள்... பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் 3 முழு நேர உறுப்பினா்களாக சஞ்சீவ் சன்யல், சஞ்சய் குமாா் மிஸ்ரா, ஷமிகா ரவி ஆகியோா் தொடா்ந்து தக்கவைக்கப்பட்டுள்ளனா். பகுதி நேர உறுப்பினா்களாக ராகேஷ் மோகன், சஜித் செனோய், நீல்கந்த் மிஸ்ரா, நிலேஷ் ஷா, டி.டி.ராம் மோகன், கே.வி.ராஜு, சேட்டன் கட், பமி துவா, புலக் கோஷ், கெளரவ் வல்லப் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.