செய்திகள் :

உக்ரைனுக்கு செக்மேட்! ரஷியாவின் பலே திட்டம் என்ன?

post image

உக்ரைனின் பெரும் பகுதிகளை இந்தாண்டு இறுதிக்குள் கைப்பற்ற ரஷியா திட்டமிட்டுள்ளது.

ரஷியா - உக்ரைன் போருக்கான மூல காரணம், நேட்டோவில் உக்ரைன் இணைய முயற்சித்ததுதான். ஆனால், தற்போது போருக்கான காரணம் வேறொன்றாக மாறியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் பெரும்பகுதியை ஆக்கிரமிக்கவே ரஷியா தொடர்ந்து போரிட்டு வருவதாக உக்ரைன் தெரிவிக்கிறது.

உக்ரைனை கடல் அல்லாத நாடாக ஆக்கும் முயற்சியாக, டினிப்ரோ நதிக்கு கிழக்கே உள்ள உக்ரைனின் அனைத்து பகுதிகளையும் ஆக்கிரமிக்க ரஷியா முடிவு செய்துள்ளது. இதன் மூலம், கருங்கடலிலிருந்து உக்ரைன் துண்டிக்கப்பட்டு, வெறும் நிலப்பரப்பை மட்டுமே கொண்ட நாடாக மாறும்.

ஆனால், டினிப்ரோதான் உக்ரைனின் பொருளாதாரத்தில் முக்கிய பங்களித்து வருகிறது. உக்ரைனின் மொத்த பரப்பளவானது, தோராயமாக 6.03 லட்சம் சதுர கிலோமீட்டர்; இதில் 3.36 லட்சம் சதுர கிலோமீட்டரைக் கைப்பற்ற ரஷியா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்து, உக்ரைன் அதிபர் அலுவலகம் கூறுகையில், வருகிற செப்டம்பர் முதல் தேதிக்குள் உக்ரைனின் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் மாநிலங்களை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவர ரஷியா திட்டமிட்டுள்ளது.

மேலும், இந்தாண்டு இறுதிக்குள்ளாக வடக்கு உக்ரைன் வரை ஆக்கிரமித்து, தனது எல்லையை நிறுவ ரஷியா முயற்சிக்கிறது என்று தெரிவித்தது.

அதுமட்டுமின்றி ஒடெசா, மைக்கோலைவ் பகுதிகளைக் கைப்பற்றிவிட்டால், கடலிலிருந்து உக்ரைன் துண்டிக்கப்பட்டு, கடல் போக்குவரத்துக்கு ரஷியாவைதான் உக்ரைன் அணுக வேண்டியிருக்கும்.

உக்ரைனை முதலில் ராணுவம் மூலமாகவும், தொடர்ந்து பொருளாதார ரீதியாகவும் தாக்குதல் நடத்த ரஷியா முயற்சிப்பதாகத் தெரிகிறது.

இதையும் படிக்க:சொல்லப் போனால்... திட்டமிடப்படாத நெரிசல் கொலைகள்!

டிரம்ப் அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்! லாஸ் ஏஞ்சலீஸில் அமைதியின்மை!

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அந்நாட்டு அரசு கைது செய்து வருவதற்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு, த... மேலும் பார்க்க

கொலோம்பியா: அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு; உயிருக்கு ஆபத்து?

கொலோம்பியா நாட்டின் அதிபர் வேட்பாளர் மிகுவல் உரிபே மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தென் அமெரிக்காவின் கொலோம்பியாவில் அடுத்தாண்ட... மேலும் பார்க்க

80% ஆதரவு! எலான் மஸ்க் புதிய கட்சி அறிவிப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடனான மோதலுக்கிடையே, தி அமெரிக்கன் பார்ட்டி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் அறிவித்தார்.அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதாவால், அந்நாட்டு அதிபர் டொனால்ட்... மேலும் பார்க்க

காஸா: தாய்லாந்து பிணைக் கைதிகளின் உடல் மீட்பு

கடந்த 2023-ஆம் ஆண்டு ஹமாஸ் படையினரால் கடத்திச் செல்லப்பட்ட தாய்லாந்து பிணைக் கைதியின் சடலத்தை மீட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது, இது குறித்து அந்த நாட்டு பிரதமா் அலுவலகம் சனிக்கிழமை கூறியதாவது: தாய... மேலும் பார்க்க

மெக்ஸிகோவில் விமான விபத்து

மெக்ஸிகோவில் சிறிய விமானம் விழுந்து நொறுங்கியதில் 3 போ் உயிரிழந்தனா். கௌதமாலா எல்லைக்கு அருகே உள்ள ஓரிடத்தில் கால்நடைகளிடையே பரவும் ஒட்டுண்ணிகளை அழிக்கக் கூடிய, குறிப்பிட்ட வகையைச் சோ்ந்த ஈக்களை விம... மேலும் பார்க்க

கிழக்கு உக்ரைன் நகரில் ரஷியா குண்டுமழை!

கிழக்கு உக்ரைனின் காா்கிவ் நகரில் மிகப் பெரிய அளவிலான ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை ரஷியா நடத்தியுள்ளது. இதில் 3 போ் பலியாகினா்; 21 போ் காயமடைந்தனா். இந்த தாக்குதல், மூன்று ஆண்டுகாலப் போரில் ரஷியா... மேலும் பார்க்க